| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 882 | திருமாலை || (திருவரங்கம் என்னப் பெறாதவர்கள் கர்ப்ப நிர் பாக்யர் -என்கிறார்) 11 | ஒரு வில்லால் ஓங்கு முந்நீர் அடைத்து உலகங்கள் உய்யச் செருவிலே யரக்கர் கோனைச் செற்ற நம் சேவகனார் மருவிய பெரிய கோயில் மதிள் திருவரங்கம் என்னா கருவிலே திரு விலாதீர் காலத்தைக் கழிக்கின்றீரே | oru villaal,ஒரு வில்லால் - சார்ங்கம் என்கிற ஒரு வில்லாலே oongu munneer adaittu,ஓங்கு முந்நீர் அடைத்து - கொந்தளிக்கின்ற கடலை அணை கட்டி ulangal uyya,உலகங்கள் உய்ய - லோகமெல்லாம் வாழும்படி seruvile,செருவிலே - போர்க் களத்திலே arakkar konai,அரக்கர் கோனை - இராவணனை setra,செற்ற - முடித்தருளின nam sevaganar,நம் சேவகனார் - நமக்குத் தலைவரும் மஹா வீரருமான பெருமாள் maruyia,மருவிய - பொருந்தி வாழ்வதற்கு இடமான periya koyil,பெரிய கோயில் - பெருமை தங்கிய கோயிலாவது madhil thiruarangam,மதிள் திரு அரங்கம் - ஸப்த ப்ராகாரங்கள் சூழ்ந்த ஸ்ரீ ரங்க க்ஷேத்ரம் ennaa,என்னா - என்று சொல்ல மாட்டாத karuvile thiru ilaadheer,கருவிலே திரு இலாதீர் - கர்ப்ப நிர்ப் பாக்யர்களே! kaalathai,காலத்தை - (பகவதநுபவத்துக்காகக் கண்ட) காலத்தை kazhikkinreer,கழிக்கின்றீர் - பாழே போக்குகிறீர்களே! |