திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 882 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
882திருமாலை || (திருவரங்கம் என்னப் பெறாதவர்கள் கர்ப்ப நிர் பாக்யர் -என்கிறார்) 11
ஒரு வில்லால் ஓங்கு முந்நீர் அடைத்து உலகங்கள் உய்யச் செருவிலே யரக்கர் கோனைச் செற்ற நம் சேவகனார் மருவிய பெரிய கோயில் மதிள் திருவரங்கம் என்னா கருவிலே திரு விலாதீர் காலத்தைக் கழிக்கின்றீரே
பதவுரை Show / Hide
oru villaal,ஒரு வில்லால் - சார்ங்கம் என்கிற ஒரு வில்லாலே
oongu munneer adaittu,ஓங்கு முந்நீர் அடைத்து - கொந்தளிக்கின்ற கடலை அணை கட்டி
ulangal uyya,உலகங்கள் உய்ய - லோகமெல்லாம் வாழும்படி
seruvile,செருவிலே - போர்க் களத்திலே
arakkar konai,அரக்கர் கோனை - இராவணனை
setra,செற்ற - முடித்தருளின
nam sevaganar,நம் சேவகனார் - நமக்குத் தலைவரும் மஹா வீரருமான பெருமாள்
maruyia,மருவிய - பொருந்தி வாழ்வதற்கு இடமான
periya koyil,பெரிய கோயில் - பெருமை தங்கிய கோயிலாவது
madhil thiruarangam,மதிள் திரு அரங்கம் - ஸப்த ப்ராகாரங்கள் சூழ்ந்த ஸ்ரீ ரங்க க்ஷேத்ரம்
ennaa,என்னா - என்று சொல்ல மாட்டாத
karuvile thiru ilaadheer,கருவிலே திரு இலாதீர் - கர்ப்ப நிர்ப் பாக்யர்களே!
kaalathai,காலத்தை - (பகவதநுபவத்துக்காகக் கண்ட) காலத்தை
kazhikkinreer,கழிக்கின்றீர் - பாழே போக்குகிறீர்களே!