Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 882 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
882திருமாலை || (திருவரங்கம் என்னப் பெறாதவர்கள் கர்ப்ப நிர் பாக்யர் -என்கிறார்) 11
ஒரு வில்லால் ஓங்கு முந்நீர் அடைத்து உலகங்கள் உய்யச்
செருவிலே யரக்கர் கோனைச் செற்ற நம் சேவகனார்
மருவிய பெரிய கோயில் மதிள் திருவரங்கம் என்னா
கருவிலே திரு விலாதீர் காலத்தைக் கழிக்கின்றீரே
oru villaal,ஒரு வில்லால் - சார்ங்கம் என்கிற ஒரு வில்லாலே
oongu munneer adaittu,ஓங்கு முந்நீர் அடைத்து - கொந்தளிக்கின்ற கடலை அணை கட்டி
ulangal uyya,உலகங்கள் உய்ய - லோகமெல்லாம் வாழும்படி
seruvile,செருவிலே - போர்க் களத்திலே
arakkar konai,அரக்கர் கோனை - இராவணனை
setra,செற்ற - முடித்தருளின
nam sevaganar,நம் சேவகனார் - நமக்குத் தலைவரும் மஹா வீரருமான பெருமாள்
maruyia,மருவிய - பொருந்தி வாழ்வதற்கு இடமான
periya koyil,பெரிய கோயில் - பெருமை தங்கிய கோயிலாவது
madhil thiruarangam,மதிள் திரு அரங்கம் - ஸப்த ப்ராகாரங்கள் சூழ்ந்த ஸ்ரீ ரங்க க்ஷேத்ரம்
ennaa,என்னா - என்று சொல்ல மாட்டாத
karuvile thiru ilaadheer,கருவிலே திரு இலாதீர் - கர்ப்ப நிர்ப் பாக்யர்களே!
kaalathai,காலத்தை - (பகவதநுபவத்துக்காகக் கண்ட) காலத்தை
kazhikkinreer,கழிக்கின்றீர் - பாழே போக்குகிறீர்களே!