| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 883 | திருமாலை || (தாம் பெற்றாலும் பிறர் படும் அனர்த்தைப் பொறுக்க மாட்டேன் என்கிறார் ) 12 | நமனும் முற்கலனும் பேச நரகில் நின்றார்கள் கேட்க நரகமே சுவர்க்கமாகும் நாமங்கள் உடைய நம்பி அவனதுஊர் அரங்கம் என்னா அயர்த்து வீழ்ந்து அளிய மாந்தர் கவலையுள் படுகின்றார் என்று அதனுக்கே கவர்கின்றேனே | namanum,நமனும் - யம தர்ம ராஜாவும் murukalanum,முற்கலனும் - முத்கல பகவானும் ஒருவர்க்கொருவர் paesa,பேச - வார்த்தை யாடிக் கொண்டிருக்க naragil nindraar kalakk,நரகில் நின்றார்கள் கேட்க - அந்த வார்த்தை நரகத்திலே பாப பலன்களை அனுபவிக்கிற பாவிகளின் காதில் பட்டவளவிலே naragame,நரகமே - அந்த நரகந்தானே suvarkkam aagum,சுவர்க்கம் ஆகும் - ஸ்வர்க்க லோகமாய் விட்டது என்று சொல்லுதற்கீடான மேன்மை வாய்ந்த naamangal udaiya,நாமங்கள் உடைய - திருநாமங்களை யுடைய nambi avanathu,நம்பி அவனது - பரிபூரண எம்பெருமானுடைய oor,ஊர் - திவ்ய தேசம் arangam ennaadhu,அரங்கம் என்னாது - திருவரங்கமாகும் என்று சொல்லாமல் alia maandhar,அளிய மாந்தர் - அருமந்த மனுஷ்யர்கள் ayarndhu - (swaroopaththai) marandhu,அயர்ந்து -(ஸ்வரூபத்தை) மறந்து - (ஸ்வரூபத்தை) மறந்து veenndhu,வீழ்ந்து - (விஷயாந்தரப் படுகுழியிலே) விழுந்து kavalaiyul paduginraar endru,கவலையுள் படுகின்றார் என்று - துக்கத்திலே அகப்படுகிறார்களே என்று adhanukkae,அதனுக்கே - அதற்காகவே kavalkindrein,கவல்கின்றேன் - நான் கவலைப் படா நின்றேன். |