திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 885 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
885திருமாலை || (பகவத் விரோதிகளோடு இதுவரை தமக்கு இருந்த சம்பந்தத்தால் வந்த விடாய் தீர திரு நாமத்தை வாயாரப் பேசுகிறார் ) 14
வண்டினம் முரலும் சோலை மயிலினம் ஆலும் சோலை கொண்டல் மீது அணவும் சோலை குயிலினம் கூவும் சோலை அண்டர் கோன் அமரும் சோலை அணி திருவரங்கம் என்னா மிண்டர் பாய்ந்து உண்ணும் சோற்றை விலக்கி நாய்க்கு இடுமின் நீரே
பதவுரை Show / Hide
vandu inam muralum solai,வண்டு இனம் முரலும் சோலை - வண்டுகளின் கூட்டங்களானவை காநம் செய்யா நிற்கப் பெற்ற சோலைகளை யுடையதும்,
mayil inam aalum solai,மயில் இனம் ஆலும் சோலை - மயில்களின் கூட்டங்களானவை கூத்தாடா நிற்கப் பெற்ற சோலைகளை யுடையதும்
kondal meedhu anavum solai,கொண்டல் மீது அணவும் சோலை - மேகங்களானவை மேலே வந்து படியா நிற்கப் பெற்ற சோலைகளை யுடையதும்
kuyil inam koovum solai,குயில் இனம் கூவும் சோலை - குயில்களின் கூட்டங்கள் ஒன்றையொன்று அழையா நிற்கப் பெற்ற சோலைகளை யுடையதும்,
andar kon amarum solai,அண்டர் கோன் அமரும் சோலை - தேவர்கட்குத் தலைவனான ஸ்ரீரங்கனாதன் நித்ய வாஸம் பண்ணப் பெற்ற சோலைகளை
ani,அணி - ஆபரணமாக வுடையதுமான
thiru arangam ennaa,திருஅரங்கம் என்னா - ஸ்ரீரங்கம் என்று சொல்ல மாட்டாத
mindar,மிண்டர் - நன்றி யறிவில்லாத மூர்க்கர்கள்
paayndhu unnum soatrai,பாய்ந்து உண்ணும் சோற்றை - மேல் விழுந்து உண்ணுகிற சோற்றை
vilakki,விலக்கி - (அவர்கள் உண்ணக் கூடாதபடி) தடுத்து
neer naaykku idumin,நீர் நாய்க்கு இடுமின் - நீங்கள் (அந்தச்சோற்றை) நாய்க்கு இடுங்கள்.