| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 885 | திருமாலை || (பகவத் விரோதிகளோடு இதுவரை தமக்கு இருந்த சம்பந்தத்தால் வந்த விடாய் தீர திரு நாமத்தை வாயாரப் பேசுகிறார் ) 14 | வண்டினம் முரலும் சோலை மயிலினம் ஆலும் சோலை கொண்டல் மீது அணவும் சோலை குயிலினம் கூவும் சோலை அண்டர் கோன் அமரும் சோலை அணி திருவரங்கம் என்னா மிண்டர் பாய்ந்து உண்ணும் சோற்றை விலக்கி நாய்க்கு இடுமின் நீரே | vandu inam muralum solai,வண்டு இனம் முரலும் சோலை - வண்டுகளின் கூட்டங்களானவை காநம் செய்யா நிற்கப் பெற்ற சோலைகளை யுடையதும், mayil inam aalum solai,மயில் இனம் ஆலும் சோலை - மயில்களின் கூட்டங்களானவை கூத்தாடா நிற்கப் பெற்ற சோலைகளை யுடையதும் kondal meedhu anavum solai,கொண்டல் மீது அணவும் சோலை - மேகங்களானவை மேலே வந்து படியா நிற்கப் பெற்ற சோலைகளை யுடையதும் kuyil inam koovum solai,குயில் இனம் கூவும் சோலை - குயில்களின் கூட்டங்கள் ஒன்றையொன்று அழையா நிற்கப் பெற்ற சோலைகளை யுடையதும், andar kon amarum solai,அண்டர் கோன் அமரும் சோலை - தேவர்கட்குத் தலைவனான ஸ்ரீரங்கனாதன் நித்ய வாஸம் பண்ணப் பெற்ற சோலைகளை ani,அணி - ஆபரணமாக வுடையதுமான thiru arangam ennaa,திருஅரங்கம் என்னா - ஸ்ரீரங்கம் என்று சொல்ல மாட்டாத mindar,மிண்டர் - நன்றி யறிவில்லாத மூர்க்கர்கள் paayndhu unnum soatrai,பாய்ந்து உண்ணும் சோற்றை - மேல் விழுந்து உண்ணுகிற சோற்றை vilakki,விலக்கி - (அவர்கள் உண்ணக் கூடாதபடி) தடுத்து neer naaykku idumin,நீர் நாய்க்கு இடுமின் - நீங்கள் (அந்தச்சோற்றை) நாய்க்கு இடுங்கள். |