| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 886 | திருமாலை || (சம்பந்த உணர்ச்சியைப் பெருக்கின வாற்றை பேசுகிறார்) 15 | மெய்யர்க்கே மெய்யன் ஆகும் விதியிலா என்னைப் போலே பொய்யர்க்கே பொய்யனாகும் புட்கொடி உடைய கோமான் உய்யப்போம் உணர்வினார்கட்கு ஒருவன் என்று உணர்ந்த பின்னர் ஐயப்பாடு அறுத்துத் தோன்றும் அழகனூர் அரங்கம் அன்றே | pul kodi udaiya gomaan,புள் கொடி உடைய கோமான் - கருடனைக் கொடியாக வுடைய ஸ்வாமியான திருமால் vidhi ilaa ennai pol,விதி இலா என்னை போல - (நெடுங்காலம் எம்பெருமானது அருளைப் பெறுதற்கு ஏற்ற) நல்வினை இல்லாதிருந்த என்னைப் போல meyyarkku,மெய்யர்க்கு - அத்வேஷ மாத்திரமுடையவர்க்கு meyyan aagum,மெய்யன் ஆகும் - (தன் ஸ்வரூபத்தை) உள்ளபடி காட்டித் தருவன்; poyyarkku,பொய்யர்க்கு - (எம்பெருமான் விஷயத்தில்) அத்வேஷத்தைப் பெற்றிராதவர்க்கு poyyan aagum,பொய்யன் ஆகும் - (எம்பெருமான் விஷயத்திலே பகைமை கொண்டிருப்பவர்க்கு) (தனது ஸ்வரூபத்தைக் காட்டித் தராமல் தானும்) பொய்யனாயிருப்பன்; uyyappom unarvinarkku,உய்யப்போம் உணர்வினார்கட்கு - உஜ்ஜீவிப்பதற்கு உரிய நல்லறிவு உடையவர்க்கு (கீழ்க்கூறிய மெய்யர்க்கு) oruvan endru unarndha pinnaai,ஒருவன் என்று உணர்ந்த பின்னை - ‘கடவுள் ஒருவன் உண்டு’ என்று நல்லறிவு பிறந்த பின்பு aiyyappaadu aruthu,ஐயப்பாடு அறுத்து - பின்னும் வரக்கூடிய ஸந்தேகங்களைப் போக்கி thondrum,தோன்றும் - ஸேவை ஸாதிக்கிற azhagan,அழகன் - அழகை யுடைய அந்த எம்பெருமானது oor,ஊர் - இருப்பிடம் arangam andrae,அரங்கம் அன்றே - திருவரங்கமாகும்; (அன்றே ஈற்றசை; தேற்றமுமாம்) |