Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 886 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
886திருமாலை || (சம்பந்த உணர்ச்சியைப் பெருக்கின வாற்றை பேசுகிறார்) 15
மெய்யர்க்கே மெய்யன் ஆகும் விதியிலா என்னைப் போலே
பொய்யர்க்கே பொய்யனாகும் புட்கொடி உடைய கோமான்
உய்யப்போம் உணர்வினார்கட்கு ஒருவன் என்று உணர்ந்த பின்னர்
ஐயப்பாடு அறுத்துத் தோன்றும் அழகனூர் அரங்கம் அன்றே
pul kodi udaiya gomaan,புள் கொடி உடைய கோமான் - கருடனைக் கொடியாக வுடைய ஸ்வாமியான திருமால்
vidhi ilaa ennai pol,விதி இலா என்னை போல - (நெடுங்காலம் எம்பெருமானது அருளைப் பெறுதற்கு ஏற்ற) நல்வினை இல்லாதிருந்த என்னைப் போல
meyyarkku,மெய்யர்க்கு - அத்வேஷ மாத்திரமுடையவர்க்கு
meyyan aagum,மெய்யன் ஆகும் - (தன் ஸ்வரூபத்தை) உள்ளபடி காட்டித் தருவன்;
poyyarkku,பொய்யர்க்கு - (எம்பெருமான் விஷயத்தில்) அத்வேஷத்தைப் பெற்றிராதவர்க்கு
poyyan aagum,பொய்யன் ஆகும் - (எம்பெருமான் விஷயத்திலே பகைமை கொண்டிருப்பவர்க்கு)
(தனது ஸ்வரூபத்தைக் காட்டித் தராமல் தானும்) பொய்யனாயிருப்பன்;

uyyappom unarvinarkku,உய்யப்போம் உணர்வினார்கட்கு - உஜ்ஜீவிப்பதற்கு உரிய நல்லறிவு உடையவர்க்கு (கீழ்க்கூறிய மெய்யர்க்கு)
oruvan endru unarndha pinnaai,ஒருவன் என்று உணர்ந்த பின்னை - ‘கடவுள் ஒருவன் உண்டு’ என்று நல்லறிவு பிறந்த பின்பு
aiyyappaadu aruthu,ஐயப்பாடு அறுத்து - பின்னும் வரக்கூடிய ஸந்தேகங்களைப் போக்கி
thondrum,தோன்றும் - ஸேவை ஸாதிக்கிற
azhagan,அழகன் - அழகை யுடைய அந்த எம்பெருமானது
oor,ஊர் - இருப்பிடம்
arangam andrae,அரங்கம் அன்றே - திருவரங்கமாகும்; (அன்றே ஈற்றசை; தேற்றமுமாம்)