| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 887 | திருமாலை || (விஷயத்துக்கு தகுதியாக பக்தியை பெருக்கின படியை பேசுகிறார்) 16 | சூதனாய்க் கள்வனாகித் தூர்தரோடு இசைந்த காலம் மாதரார் கயல் கண் என்னும் வலையுள் பட்டு அழுந்துவேனை போதரே என்று சொல்லிப் புந்தியுள் புகுந்து தன பால் ஆதரம் பெருக வைத்தான் அழகனூர் அரங்கம் அன்றே | soodhan aay,சூதன் ஆய் - (முதலில்) சூதிலே ஊன்றினவனாய் kalvan aagi,கள்வன் ஆகி - (பிறகு) களவிலே ஆழ்ந்தவனாய் thooratharoatu isaindha kaalam,தூர்த்தரோடு இசைந்த காலம் - விஷயாந்தர ப்ரவணரோடே பொருந்தியிருந்த காலத்திலே maatharaar,மாதரார் - ஸ்திரீகளுடைய kayal kan yennum,கயல் கண் என்னும் - கயல் போன்ற கண்களாகிற valaiyul pattu,வலையுள் பட்டு - வலையினுள்ளே அகப்பட்டு alundhuvaenai,அழுந்துவேனை - அழுந்திக் கிடக்கிற என்னை podhare endru soll,போதரே என்று சொல்லி - ‘அடா! இப்படி வா’ என்று அருளிச் செய்து pundhiyil pugandhu,புந்தியில் புகந்து - என் மணஸிலே வந்து புகந்து thanpaal aadaram peruga vaitha azhagan,தன்பால் ஆதரம் பெருக வைத்த அழகன் - தன்னிடத்திலே அன்பை வளரச் செய்த அழகை யுடைய எம்பெருமானது oor,ஊர் - இருப்பிடம் arangam andrae,அரங்கம் அன்றே - திருவரங்கமாகும்; (அன்றே ஈற்றசை; தேற்றமுமாம்) |