| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 888 | திருமாலை || (தமது கண்கள் களித்தபடியைப் பேசுகிறா) 17 | விரும்பி நின்று ஏத்த மாட்டேன் விதியிலேன் மதி யொன்று இல்லை இரும்பு போல் வலிய நெஞ்சம் இறை இறை உருகும் வண்ணம் சுரும்பமர் சோலை சூழ்ந்த அரங்க மா கோயில் கொண்ட கரும்பினைக் கண்டு கொண்ட என் கண்ணினை களிக்குமாறே | virumbi nindru,விரும்பி நின்று - ஆதாரத்தோடே ஒருபடிப்பட நின்று aetha maatten,ஏத்த மாட்டேன் - ஸ்தோத்ரம் பண்ண மாட்டாதவனா யிரா நின்றேன்; vidhi ilaen,விதி இலேன் - (கை கூப்புதல் முதலிய) காயிக வ்யாபாரங்களும் செய்யப் பெறாதவனாயிரா நின்றேன், madhi ondru illai,மதி ஒன்று இல்லை - (‘ஈஸ்வரன் ஒருவன் உண்டு என்கிற) ஒரு அறிவும் (எனக்கு) இல்லை; irumbu pol valiya nenjam,இரும்பு போல் வலிய நெஞ்சம் - (இப்படிப்பட்ட என்னுடைய) இரும்பைப் போல் கடினமான கல் நெஞ்சானது irai irai urugum vannam,இறை இறை உருகும் வண்ணம் - கொஞ்சம் கொஞ்சமாக உருகும்படி; surumbu amar,சுரும்பு அமர் - வண்டுகள் பொருந்திய solai suuzhnda,சோலை சூழ்ந்த - சோலைகளாலே சூழப்பட்ட maa arangam,மா அரங்கம் - மாட்சிமை தங்கிய ஸ்ரீரங்கத்தை kovil kond,கோயில் கொண்ட - இருப்பிடமாகத் திரு வுள்ளம் பற்றின karumpinai,கரும்பினை - பரம யோக்யனான எம்பெருமானை en kan inai,என் கண் இணை - எனது இரண்டு கண்களும் kandu kondtu,கண்டு கொண்டு - பார்த்த வண்ணமாய் kalikkum aaru ye,களிக்கும் ஆறு ஏ - மகிழ்ச்சி யடைகிற விதம் என்னே? (என்று ஆச்சர்யப்படுகிறபடி.) |