Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 888 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
888திருமாலை || (தமது கண்கள் களித்தபடியைப் பேசுகிறா) 17
விரும்பி நின்று ஏத்த மாட்டேன் விதியிலேன் மதி யொன்று இல்லை
இரும்பு போல் வலிய நெஞ்சம் இறை இறை உருகும் வண்ணம்
சுரும்பமர் சோலை சூழ்ந்த அரங்க மா கோயில் கொண்ட
கரும்பினைக் கண்டு கொண்ட என் கண்ணினை களிக்குமாறே
virumbi nindru,விரும்பி நின்று - ஆதாரத்தோடே ஒருபடிப்பட நின்று
aetha maatten,ஏத்த மாட்டேன் - ஸ்தோத்ரம் பண்ண மாட்டாதவனா யிரா நின்றேன்;
vidhi ilaen,விதி இலேன் - (கை கூப்புதல் முதலிய) காயிக வ்யாபாரங்களும் செய்யப் பெறாதவனாயிரா நின்றேன்,
madhi ondru illai,மதி ஒன்று இல்லை - (‘ஈஸ்வரன் ஒருவன் உண்டு என்கிற) ஒரு அறிவும் (எனக்கு) இல்லை;
irumbu pol valiya nenjam,இரும்பு போல் வலிய நெஞ்சம் - (இப்படிப்பட்ட என்னுடைய) இரும்பைப் போல் கடினமான கல் நெஞ்சானது
irai irai urugum vannam,இறை இறை உருகும் வண்ணம் - கொஞ்சம் கொஞ்சமாக உருகும்படி;
surumbu amar,சுரும்பு அமர் - வண்டுகள் பொருந்திய
solai suuzhnda,சோலை சூழ்ந்த - சோலைகளாலே சூழப்பட்ட
maa arangam,மா அரங்கம் - மாட்சிமை தங்கிய ஸ்ரீரங்கத்தை
kovil kond,கோயில் கொண்ட - இருப்பிடமாகத் திரு வுள்ளம் பற்றின
karumpinai,கரும்பினை - பரம யோக்யனான எம்பெருமானை
en kan inai,என் கண் இணை - எனது இரண்டு கண்களும்
kandu kondtu,கண்டு கொண்டு - பார்த்த வண்ணமாய்
kalikkum aaru ye,களிக்கும் ஆறு ஏ - மகிழ்ச்சி யடைகிற விதம் என்னே? (என்று ஆச்சர்யப்படுகிறபடி.)