திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 889 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
889திருமாலை || (கண் களிப்பு புற வெள்ளம் இட்டபடியைப் பேசுகிறார்) 18
இனித் திரைத் திவலை மோத வெறியும் தண் பரவை மீதே தனிக் கிடந்து அரசு செய்யும் தாமரைக் கண்ணன் எம்மான் கனி இருந்தனைய செவ்வாய்க் கண்ணனைக் கண்ட கண்கள் பனி யரும்பு திரு மாலோ என் செய்கேன் பாவியேனே
பதவுரை Show / Hide
thirai thivalai,திரை திவலை - அலைகளிலுண்டான திவலைகளானவை
inidhu modha,இனிது மோத - இனிதாக அடிக்க (வீச)
eriyum,எறியும் - கொந்தளிக்கிற
than,தண் - குளிர்ந்த
paravai meedhu,பரவை மீது - கடல் போன்ற திருக் காவேரியிலே
thani kidandhu,தனி கிடந்து - தனியே வந்து கண் வளர்ந்தருளி
arasu seyyum,அரசு செய்யும் - செங்கோல் செலுத்துகிற
thaamarai kannan,தாமரை கண்ணன் - புண்டரீகாக்ஷனாய்
emmaan,எம்மான் - எமக்கு தலைவனாய்
kani irundhanaiya sem vaai kannanai,கனி இருந்தனைய செம் வாய் கண்ணனை - கொவ்வைக் கனி போன்ற சிவந்த வாயை யுடையனான கண்ண பிரானை
kandu kondru,கண்ட கண்கள் - ஸேவிக்கப் பெற்ற (எனது) கண்களில் நின்றும்
pani arumpu,பனி அரும்பு - குளிர்ந்த கண்ண நீர்த் துளிகள்
udhirum,உதிரும் - பெருகா நின்றன,
paaviyaen,பாவியேன் - (கண்ணாரக் கண்டு களிக்கைக்குப்) பாக்கியமில்லாத நான்
en seydhaen,என் செய்தேன் - ஏது செய்வேன்?