| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 889 | திருமாலை || (கண் களிப்பு புற வெள்ளம் இட்டபடியைப் பேசுகிறார்) 18 | இனித் திரைத் திவலை மோத வெறியும் தண் பரவை மீதே தனிக் கிடந்து அரசு செய்யும் தாமரைக் கண்ணன் எம்மான் கனி இருந்தனைய செவ்வாய்க் கண்ணனைக் கண்ட கண்கள் பனி யரும்பு திரு மாலோ என் செய்கேன் பாவியேனே | thirai thivalai,திரை திவலை - அலைகளிலுண்டான திவலைகளானவை inidhu modha,இனிது மோத - இனிதாக அடிக்க (வீச) eriyum,எறியும் - கொந்தளிக்கிற than,தண் - குளிர்ந்த paravai meedhu,பரவை மீது - கடல் போன்ற திருக் காவேரியிலே thani kidandhu,தனி கிடந்து - தனியே வந்து கண் வளர்ந்தருளி arasu seyyum,அரசு செய்யும் - செங்கோல் செலுத்துகிற thaamarai kannan,தாமரை கண்ணன் - புண்டரீகாக்ஷனாய் emmaan,எம்மான் - எமக்கு தலைவனாய் kani irundhanaiya sem vaai kannanai,கனி இருந்தனைய செம் வாய் கண்ணனை - கொவ்வைக் கனி போன்ற சிவந்த வாயை யுடையனான கண்ண பிரானை kandu kondru,கண்ட கண்கள் - ஸேவிக்கப் பெற்ற (எனது) கண்களில் நின்றும் pani arumpu,பனி அரும்பு - குளிர்ந்த கண்ண நீர்த் துளிகள் udhirum,உதிரும் - பெருகா நின்றன, paaviyaen,பாவியேன் - (கண்ணாரக் கண்டு களிக்கைக்குப்) பாக்கியமில்லாத நான் en seydhaen,என் செய்தேன் - ஏது செய்வேன்? |