| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 890 | திருமாலை || (உடல் உருகின படி சொல்கிறார்) 19 | குட திசை முடியை வைத்து குண திசை பாதம் நீட்டி வட திசை பின்பு காட்டி தென் திசை இலங்கை நோக்கிக் கடல் நிறக் கடவுள் எந்தை அரவணைத் துயிலுமா கண்டு உடல் எனக்கு உருகுமாலோ என் செய்கேன் உலகத்தீரே- (உடல் நெக்கு உருகுமாலோ பாட பேதம் -நெக்கு கரைந்து) | ulagatheere,உலகத்தீரே - உலகத்திலுள்ளவர்களே! kadal niram kadavul,கடல் நிறம் கடவுள் - கடல் போன்ற கரு நிறத்தை யுடைய கடவுளான endhai,எந்தை - எம்பெருமான் kudathisai,குடதிசை - மேற்கு திக்கில் mudiyai vaithu,முடியை வைத்து - திருமுடியை வைத்தருளியும் guna thisai,குண திசை - கிழக்குத் திக்கில் padham neetti,பாதம் நீட்டி - திருவடிகளை நீட்டியும் vada thisai,வட திசை - வடக்குத் திக்கிலே pinpu kaatti,பின்பு காட்டி - (தனது) பின்புறத்தைக் காட்டியும் then thisai,தென் திசை - தெற்குத் திக்கில் ilankai,இலங்கை - (விபீஷணன் வாழுமிடமான) லங்கையை nokki,நோக்கி - (அன்போடு) பார்த்துக் கொண்டும் aravum anai,அரவும் அணை - திருவனந்தாழ்வானாகிற படுக்கையில் thuyilum aa,துயிலும் ஆ - யோக நித்திரை செய்யுந் தன்மையை kandu,கண்டு - காண்பதனால் udal enakku urugum,உடல் எனக்கு உருகும் - எனக்கு உடல் உருகும் aalo,ஆலோ - ஐயோ en seyvaen,என் செய்வேன் - (நான்) என்ன செய்ய மாட்டுவேன் |