Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 890 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
890திருமாலை || (உடல் உருகின படி சொல்கிறார்) 19
குட திசை முடியை வைத்து குண திசை பாதம் நீட்டி
வட திசை பின்பு காட்டி தென் திசை இலங்கை நோக்கிக்
கடல் நிறக் கடவுள் எந்தை அரவணைத் துயிலுமா கண்டு
உடல் எனக்கு உருகுமாலோ என் செய்கேன் உலகத்தீரே-
(உடல் நெக்கு உருகுமாலோ பாட பேதம் -நெக்கு கரைந்து)
ulagatheere,உலகத்தீரே - உலகத்திலுள்ளவர்களே!
kadal niram kadavul,கடல் நிறம் கடவுள் - கடல் போன்ற கரு நிறத்தை யுடைய கடவுளான
endhai,எந்தை - எம்பெருமான்
kudathisai,குடதிசை - மேற்கு திக்கில்
mudiyai vaithu,முடியை வைத்து - திருமுடியை வைத்தருளியும்
guna thisai,குண திசை - கிழக்குத் திக்கில்
padham neetti,பாதம் நீட்டி - திருவடிகளை நீட்டியும்
vada thisai,வட திசை - வடக்குத் திக்கிலே
pinpu kaatti,பின்பு காட்டி - (தனது) பின்புறத்தைக் காட்டியும்
then thisai,தென் திசை - தெற்குத் திக்கில்
ilankai,இலங்கை - (விபீஷணன் வாழுமிடமான) லங்கையை
nokki,நோக்கி - (அன்போடு) பார்த்துக் கொண்டும்
aravum anai,அரவும் அணை - திருவனந்தாழ்வானாகிற படுக்கையில்
thuyilum aa,துயிலும் ஆ - யோக நித்திரை செய்யுந் தன்மையை
kandu,கண்டு - காண்பதனால்
udal enakku urugum,உடல் எனக்கு உருகும் - எனக்கு உடல் உருகும்
aalo,ஆலோ - ஐயோ
en seyvaen,என் செய்வேன் - (நான்) என்ன செய்ய மாட்டுவேன்