Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 892 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
892திருமாலை || (மனசால் பரிச்சேதிக்க ஒண்ணாது என்கிறார்) 21
பணிவினால் மனமது ஒன்றிப் பவளவாய் அரங்கனார்க்குத்
துணிவினால் வாழ மாட்டாத் தொல்லை நெஞ்சே நீ சொல்லாய்
அணியினார் செம் பொன்னாய வருவரை யனைய கோயில்
மணியினார் கிடந்த வாற்றை மனத்தினால் நினைக்கலாமே
pavalam vaay,பவளம் வாய் - பவளம் போன்ற அதரத்தை யுடைய
aranganaarkku,அரங்கனார்க்கு - அழகிய மணவாளன் விஷயத்திலே
panivinaal,பணிவினால் - கைங்கர்ய ருசியால்
manam adhu ondri,மனம் அது ஒன்றி - கருத்தைப் பொருந்த வைத்து
thunivinaal,துணிவினால் - துணிவுடன்
vaazha maatta,வாழ மாட்டா - வாழ மாட்டாத
thollai nenje,தொல்லை நெஞ்சே - கிழத்தனமுள்ள மநஸ்ஸே!
aniyin aar,அணியின் ஆர். - அழகினாலே பூர்ணமாய்
sem pon aaya aruvarai anaiya,செம் பொன் ஆய அருவரை அணைய - செவ்விய பொன்னாலே செய்யப்பட்ட சிறந்த மேரு பர்வதத்தை யொத்த
kovil,கோயில் - கோயிலிலே
mani anaar,மணி அனார் - நீல மணி போன்ற எம்பெருமான்
kidandha aatrai,கிடந்த ஆற்றை - கண் வளர்ந்தருளுகிற படியை
manathinaal,மனத்தினால் - நெஞ்சினால்
ninaithal aame,நினைத்தல் ஆமே - (அளவிட்டு அறியக் கூடுமோ?
nee sollaay,நீ சொல்லாய் - நீயே சொல்லிக் காண்