| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 892 | திருமாலை || (மனசால் பரிச்சேதிக்க ஒண்ணாது என்கிறார்) 21 | பணிவினால் மனமது ஒன்றிப் பவளவாய் அரங்கனார்க்குத் துணிவினால் வாழ மாட்டாத் தொல்லை நெஞ்சே நீ சொல்லாய் அணியினார் செம் பொன்னாய வருவரை யனைய கோயில் மணியினார் கிடந்த வாற்றை மனத்தினால் நினைக்கலாமே | pavalam vaay,பவளம் வாய் - பவளம் போன்ற அதரத்தை யுடைய aranganaarkku,அரங்கனார்க்கு - அழகிய மணவாளன் விஷயத்திலே panivinaal,பணிவினால் - கைங்கர்ய ருசியால் manam adhu ondri,மனம் அது ஒன்றி - கருத்தைப் பொருந்த வைத்து thunivinaal,துணிவினால் - துணிவுடன் vaazha maatta,வாழ மாட்டா - வாழ மாட்டாத thollai nenje,தொல்லை நெஞ்சே - கிழத்தனமுள்ள மநஸ்ஸே! aniyin aar,அணியின் ஆர். - அழகினாலே பூர்ணமாய் sem pon aaya aruvarai anaiya,செம் பொன் ஆய அருவரை அணைய - செவ்விய பொன்னாலே செய்யப்பட்ட சிறந்த மேரு பர்வதத்தை யொத்த kovil,கோயில் - கோயிலிலே mani anaar,மணி அனார் - நீல மணி போன்ற எம்பெருமான் kidandha aatrai,கிடந்த ஆற்றை - கண் வளர்ந்தருளுகிற படியை manathinaal,மனத்தினால் - நெஞ்சினால் ninaithal aame,நினைத்தல் ஆமே - (அளவிட்டு அறியக் கூடுமோ? nee sollaay,நீ சொல்லாய் - நீயே சொல்லிக் காண் |