திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 892 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
892திருமாலை || (மனசால் பரிச்சேதிக்க ஒண்ணாது என்கிறார்) 21
பணிவினால் மனமது ஒன்றிப் பவளவாய் அரங்கனார்க்குத் துணிவினால் வாழ மாட்டாத் தொல்லை நெஞ்சே நீ சொல்லாய் அணியினார் செம் பொன்னாய வருவரை யனைய கோயில் மணியினார் கிடந்த வாற்றை மனத்தினால் நினைக்கலாமே
பதவுரை Show / Hide
pavalam vaay,பவளம் வாய் - பவளம் போன்ற அதரத்தை யுடைய
aranganaarkku,அரங்கனார்க்கு - அழகிய மணவாளன் விஷயத்திலே
panivinaal,பணிவினால் - கைங்கர்ய ருசியால்
manam adhu ondri,மனம் அது ஒன்றி - கருத்தைப் பொருந்த வைத்து
thunivinaal,துணிவினால் - துணிவுடன்
vaazha maatta,வாழ மாட்டா - வாழ மாட்டாத
thollai nenje,தொல்லை நெஞ்சே - கிழத்தனமுள்ள மநஸ்ஸே!
aniyin aar,அணியின் ஆர். - அழகினாலே பூர்ணமாய்
sem pon aaya aruvarai anaiya,செம் பொன் ஆய அருவரை அணைய - செவ்விய பொன்னாலே செய்யப்பட்ட சிறந்த மேரு பர்வதத்தை யொத்த
kovil,கோயில் - கோயிலிலே
mani anaar,மணி அனார் - நீல மணி போன்ற எம்பெருமான்
kidandha aatrai,கிடந்த ஆற்றை - கண் வளர்ந்தருளுகிற படியை
manathinaal,மனத்தினால் - நெஞ்சினால்
ninaithal aame,நினைத்தல் ஆமே - (அளவிட்டு அறியக் கூடுமோ?
nee sollaay,நீ சொல்லாய் - நீயே சொல்லிக் காண்