| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 893 | திருமாலை || (பாசுரம் இட்டு பேச ஒண்ணாது என்கிறார்) 22 | பேசிற்றே பேசல் அல்லால் பெருமை ஓன்று உணரலாகாது ஆசற்றார் தங்கட்கு அல்லால் அறியலாவான் அவனும் அல்லன் மாசற்றார் மனத்து உளானை வணங்கி நாம் இருப்பது அல்லால் பேசத்தான் ஆவது உண்டோ பேதை நெஞ்சே நீ சொல்லாய் | pedhai nenje,பேதை நெஞ்சே - விவேகமற்ற மனமே pesittrae,பேசிற்றே - (வேதங்களும் வைதிக புருஷர்களும்) பேசின பேச்சுக்களையே pesal allaal,பேசல் அல்லால் - (நாமும்) பேசுவதே யல்லாமல் perumai,பெருமை - (எம்பெருமானது) மேன்மையிலே maasu attrar manathu ulaanai,மாசு அற்றார் மனத்து உளானை - குற்றமற்ற பெரியோர்களின் நெஞ்சில் நித்ய வாஸம் செய்யுமவனே naam vanangi iruppadhu allaal,நாம் வணங்கி இருப்பது அல்லால் - நாம் வணங்கிக் கொண்டு காலங்கழிக்கலா மத்தனை யொழிய ondru,ஒன்று - ஏக தேசமும் unaral aagadhu,உணரல் ஆகாது - அறிய முடியாது; aasu attrar thangatku allaal,ஆசு அற்றார் தங்கட்கு அல்லால் - உபாயாந்தரப் பற்றாகிற குற்ற மற்றவர்களுக்கு தவிர (மற்றையோர்க்கு) ariyal aavaanum allan,அறியல் ஆவானும் அல்லன் - அறிய முடியாதவனா யுமிரா நின்றான் (அவன்;) pesa thaana aavadhu undoh,பேச தான் ஆவது உண்டோ - (அவன் பெருமைக் கீடாகப்) பாசுரமிட்டுப் பேசும் படியா யிராநின்றதோ? நீ சொல்லாய் |