திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 894 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
894திருமாலை || (மறக்க முடியாது என்கிறார்) 23
கங்கையில் புனிதமாய காவிரி நடுவு பாட்டுப் பொங்கு நீர் பரந்து பாயும் பூம் பொழில் அரங்கம் தன்னுள் எங்கள் மால் இறைவன் ஈசன் கிடந்தோர் கிடக்கை கண்டும் எங்கனம் மறந்து வாழ்கேன் ஏழையேன் ஏழையேனே
பதவுரை Show / Hide
ezhaiyaen,ஏழையேன் - (எம்பெருமானைக் கிட்டினால் அநுபவிக்க மாட்டாமலும், பிரிந்தால் தரிக்க மாட்டாமலும்)
பேதைமைக் குணத்தையுடைய நான்

gangaiyin punitham aaya kaaviri naduvu paattu,கங்கையின் புனிதம் ஆய காவிரி நடுவு பாட்டு - கங்கா நதியிற் காட்டிலும் பரிசுத்தி யுடையதாகிய காவேரி நதியினது நடுவிடத்திலே
pongu neer,பொங்கு நீர் - பெரிய கிளர்த்தியோடு வருகின்ற (அந் நதியின்) நீர்ப் பெருக்கு
parandhu paayum,பரந்து பாயும் - எங்கும் பரவிப் பாய்தற்கிட மானதும்
poo pozhil,பூ பொழில் - அழகிய சோலைகளை யுடையதுமாகிய
arangam thannul,அரங்கம் தன்னுள் - கோயிலிலே
engal maal,எங்கள் மால் - (அடியவரான) எங்களிடத்தில் பேரன்பு உடையவனும்
iraivan,இறைவன் - ஸர்வ ஸ்வாமியும்
eesan,ஈசன் - ஸர்வ நியாமகனுமாகிய ஸ்ரீ ரங்கநாதன்
kidandhadhu or kidakkai,கிடந்தது ஒர் கிடக்கை - சயனித்திருப்பதாகிய ஒப்பற்ற பள்ளி கொண்ட திருக் கோலத்தை
kandum,கண்டும் - ஸேவிக்கப் பெற்ற பின்பும்
marandhu,மறந்து - (அந்த கிடை யழகை) மறந்து போய்
enganam vaazhkaen,எங்ஙனம் வாழ்கேன் - எவ்வாறு தரித்திருப்பேன் யான்?
ezhaiyaney,ஏழையனே - ஒன்றுஞ் செய்யமாட்டாது திகைத்தவனாகவே நிற்பேன்.