Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 894 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
894திருமாலை || (மறக்க முடியாது என்கிறார்) 23
கங்கையில் புனிதமாய காவிரி நடுவு பாட்டுப்
பொங்கு நீர் பரந்து பாயும் பூம் பொழில் அரங்கம் தன்னுள்
எங்கள் மால் இறைவன் ஈசன் கிடந்தோர் கிடக்கை கண்டும்
எங்கனம் மறந்து வாழ்கேன் ஏழையேன் ஏழையேனே
ezhaiyaen,ஏழையேன் - (எம்பெருமானைக் கிட்டினால் அநுபவிக்க மாட்டாமலும், பிரிந்தால் தரிக்க மாட்டாமலும்)
பேதைமைக் குணத்தையுடைய நான்

gangaiyin punitham aaya kaaviri naduvu paattu,கங்கையின் புனிதம் ஆய காவிரி நடுவு பாட்டு - கங்கா நதியிற் காட்டிலும் பரிசுத்தி யுடையதாகிய காவேரி நதியினது நடுவிடத்திலே
pongu neer,பொங்கு நீர் - பெரிய கிளர்த்தியோடு வருகின்ற (அந் நதியின்) நீர்ப் பெருக்கு
parandhu paayum,பரந்து பாயும் - எங்கும் பரவிப் பாய்தற்கிட மானதும்
poo pozhil,பூ பொழில் - அழகிய சோலைகளை யுடையதுமாகிய
arangam thannul,அரங்கம் தன்னுள் - கோயிலிலே
engal maal,எங்கள் மால் - (அடியவரான) எங்களிடத்தில் பேரன்பு உடையவனும்
iraivan,இறைவன் - ஸர்வ ஸ்வாமியும்
eesan,ஈசன் - ஸர்வ நியாமகனுமாகிய ஸ்ரீ ரங்கநாதன்
kidandhadhu or kidakkai,கிடந்தது ஒர் கிடக்கை - சயனித்திருப்பதாகிய ஒப்பற்ற பள்ளி கொண்ட திருக் கோலத்தை
kandum,கண்டும் - ஸேவிக்கப் பெற்ற பின்பும்
marandhu,மறந்து - (அந்த கிடை யழகை) மறந்து போய்
enganam vaazhkaen,எங்ஙனம் வாழ்கேன் - எவ்வாறு தரித்திருப்பேன் யான்?
ezhaiyaney,ஏழையனே - ஒன்றுஞ் செய்யமாட்டாது திகைத்தவனாகவே நிற்பேன்.