| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 894 | திருமாலை || (மறக்க முடியாது என்கிறார்) 23 | கங்கையில் புனிதமாய காவிரி நடுவு பாட்டுப் பொங்கு நீர் பரந்து பாயும் பூம் பொழில் அரங்கம் தன்னுள் எங்கள் மால் இறைவன் ஈசன் கிடந்தோர் கிடக்கை கண்டும் எங்கனம் மறந்து வாழ்கேன் ஏழையேன் ஏழையேனே | ezhaiyaen,ஏழையேன் - (எம்பெருமானைக் கிட்டினால் அநுபவிக்க மாட்டாமலும், பிரிந்தால் தரிக்க மாட்டாமலும்) பேதைமைக் குணத்தையுடைய நான் gangaiyin punitham aaya kaaviri naduvu paattu,கங்கையின் புனிதம் ஆய காவிரி நடுவு பாட்டு - கங்கா நதியிற் காட்டிலும் பரிசுத்தி யுடையதாகிய காவேரி நதியினது நடுவிடத்திலே pongu neer,பொங்கு நீர் - பெரிய கிளர்த்தியோடு வருகின்ற (அந் நதியின்) நீர்ப் பெருக்கு parandhu paayum,பரந்து பாயும் - எங்கும் பரவிப் பாய்தற்கிட மானதும் poo pozhil,பூ பொழில் - அழகிய சோலைகளை யுடையதுமாகிய arangam thannul,அரங்கம் தன்னுள் - கோயிலிலே engal maal,எங்கள் மால் - (அடியவரான) எங்களிடத்தில் பேரன்பு உடையவனும் iraivan,இறைவன் - ஸர்வ ஸ்வாமியும் eesan,ஈசன் - ஸர்வ நியாமகனுமாகிய ஸ்ரீ ரங்கநாதன் kidandhadhu or kidakkai,கிடந்தது ஒர் கிடக்கை - சயனித்திருப்பதாகிய ஒப்பற்ற பள்ளி கொண்ட திருக் கோலத்தை kandum,கண்டும் - ஸேவிக்கப் பெற்ற பின்பும் marandhu,மறந்து - (அந்த கிடை யழகை) மறந்து போய் enganam vaazhkaen,எங்ஙனம் வாழ்கேன் - எவ்வாறு தரித்திருப்பேன் யான்? ezhaiyaney,ஏழையனே - ஒன்றுஞ் செய்யமாட்டாது திகைத்தவனாகவே நிற்பேன். |