Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 895 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
895திருமாலை || (பிறந்த பக்தி விஷயத்துக்கு தகுதியாக இல்லாமையாலே அது க்ரித்ரிமம் என்கிறார்) 24
வெள்ள நீர் பரந்து பாயும் விரி பொழில் அரங்கம் தன்னுள்;
கள்வனார் கிடந்தவாறும் கமல நன்முகமும் கண்டும்
உள்ளமே வலியை போலும் ஒருவன் என்று உணர மாட்டாய்
கள்ளமே காதல் செய்து உன் கள்ளத்தே கழிக்கின்றாயே
vellam neer,வெள்ளம் நீர் - பெருக்கை யுடைய காவேரி யானது
parandhu paayum,பரந்து பாயும் - எங்கும் பரவிப் பாய்தற்கு இடமானதும்
viri pozhi,விரி பொழில் - விசாலாமான சோலைகளை யுடையதுமான
arangam thannul,அரங்கம் தன்னுள் - கோயிலிலே,
kalvanaar,கள்வனார் - அடியவர்களைக் கொள்ளை கொள்ளுமவனான அழகிய மணவாளன
kidandhu aarum,கிடந்து ஆறும் - பள்ளிக் கொள்ளும்படியையும்
kamalam nal mugamum,கமலம் நல் முகமும் - தாமரை மலர் போல் அழகிய திருமுகத்தையும்
kandum,கண்டும் - ஸேவிக்கப் பெற்ற பின்பும்
ullame,உள்ளமே - ஓ நெஞ்சே!
valiyai polum,வலியை போலும் - நீ கல்லாகிராநின்றாய் போலும்!
oruvan endru,ஒருவன் என்று - அவன் ஒப்பற்றவனென்று
unara maattaay,உணர மாட்டாய் - அறிய மாட்டாய் (இவ் விஷயத்தில்)
kallam kaatale ceytu,கள்ளம் காதலே செய்து - கபடமான பக்தியையே செய்து கொண்டு
un kallatthe,உன் கள்ளத்தே - உனது கபடச் செய்கையிலேயே
kalikkindraaye,கழிக்கின்றாயே - காலத்தை கழிக்கிறாயே!