| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 895 | திருமாலை || (பிறந்த பக்தி விஷயத்துக்கு தகுதியாக இல்லாமையாலே அது க்ரித்ரிமம் என்கிறார்) 24 | வெள்ள நீர் பரந்து பாயும் விரி பொழில் அரங்கம் தன்னுள்; கள்வனார் கிடந்தவாறும் கமல நன்முகமும் கண்டும் உள்ளமே வலியை போலும் ஒருவன் என்று உணர மாட்டாய் கள்ளமே காதல் செய்து உன் கள்ளத்தே கழிக்கின்றாயே | vellam neer,வெள்ளம் நீர் - பெருக்கை யுடைய காவேரி யானது parandhu paayum,பரந்து பாயும் - எங்கும் பரவிப் பாய்தற்கு இடமானதும் viri pozhi,விரி பொழில் - விசாலாமான சோலைகளை யுடையதுமான arangam thannul,அரங்கம் தன்னுள் - கோயிலிலே, kalvanaar,கள்வனார் - அடியவர்களைக் கொள்ளை கொள்ளுமவனான அழகிய மணவாளன kidandhu aarum,கிடந்து ஆறும் - பள்ளிக் கொள்ளும்படியையும் kamalam nal mugamum,கமலம் நல் முகமும் - தாமரை மலர் போல் அழகிய திருமுகத்தையும் kandum,கண்டும் - ஸேவிக்கப் பெற்ற பின்பும் ullame,உள்ளமே - ஓ நெஞ்சே! valiyai polum,வலியை போலும் - நீ கல்லாகிராநின்றாய் போலும்! oruvan endru,ஒருவன் என்று - அவன் ஒப்பற்றவனென்று unara maattaay,உணர மாட்டாய் - அறிய மாட்டாய் (இவ் விஷயத்தில்) kallam kaatale ceytu,கள்ளம் காதலே செய்து - கபடமான பக்தியையே செய்து கொண்டு un kallatthe,உன் கள்ளத்தே - உனது கபடச் செய்கையிலேயே kalikkindraaye,கழிக்கின்றாயே - காலத்தை கழிக்கிறாயே! |