Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 897 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
897திருமாலை || (ஸ்திரீ ஸூத்ராதிகளுக்கு உள்ள நன்மை இல்லை என்கிறார்) 26
போது எல்லாம் போது கொண்டு உன் பொன்னடி புனைய மாட்டேன்
தீதிலா மொழிகள் கொண்டு உன் திருக் குணம் செப்ப மாட்டேன்
காதலால் நெஞ்சம் அன்பு கலந்திலேன் அது தன்னாலே
ஏதிலேன் அரங்கற்கு எல்லே என் செய்வான் தோன்றினேனே
podhu ellaam,போது எல்லாம் - எல்லாக் காலங்களிலும்
podhu kondhu,போது கொண்டு - பூக்களைக் கொண்டு
un pon adi punaiya maatten,உன் பொன் அடி புனைய மாட்டேன் - உன்னுடைய அழகிய திருவடிகளிலே ஸமர்ப்பிக்க மாட்டுவேனல்லேன்;
theedhu ilaa mozhihal kondhu,தீது இலா மொழிகள் கொண்டு - குற்றமற்ற சொற்களினால்
un thiru gunam seppa maatten,உன் திருக் குணம் செப்ப மாட்டேன் - உன்னுடைய நற் குணங்களைக் கீர்த்தநம் செய்ய மாட்டுவேனல்லேன்;
kaadhalaal anbu,காதலால் அன்பு - உண்மையான பக்தியால் உண்டாகிற அபிநிவேசத்தை
nenjam,நெஞ்சம் - நெஞ்சிலே
kalanthilaene,கலந்திலேன் - வைத்துக் கொண்டிருக்கின்றேனில்லை;
adhu thannaale,அது தன்னாலே - ஆதலால்
arangarkku,அரங்கர்க்கு - அழகிய மணவாளனாகிய தேவரீர்க்கு
edhilae,ஏதிலேன் - ஒரு காரணத்தாலும் ஸ்பர்சிக்கப் பெற்றவனல்லேன்;
en seyvaan thoandrinaene,என் செய்வான் தோன்றினேனே - (இப்படிப்பட்ட நான்) எதற்காகப் பிறந்தேனோ (அறியேன்)
elle,எல்லே - ஐயோ!