| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 897 | திருமாலை || (ஸ்திரீ ஸூத்ராதிகளுக்கு உள்ள நன்மை இல்லை என்கிறார்) 26 | போது எல்லாம் போது கொண்டு உன் பொன்னடி புனைய மாட்டேன் தீதிலா மொழிகள் கொண்டு உன் திருக் குணம் செப்ப மாட்டேன் காதலால் நெஞ்சம் அன்பு கலந்திலேன் அது தன்னாலே ஏதிலேன் அரங்கற்கு எல்லே என் செய்வான் தோன்றினேனே | podhu ellaam,போது எல்லாம் - எல்லாக் காலங்களிலும் podhu kondhu,போது கொண்டு - பூக்களைக் கொண்டு un pon adi punaiya maatten,உன் பொன் அடி புனைய மாட்டேன் - உன்னுடைய அழகிய திருவடிகளிலே ஸமர்ப்பிக்க மாட்டுவேனல்லேன்; theedhu ilaa mozhihal kondhu,தீது இலா மொழிகள் கொண்டு - குற்றமற்ற சொற்களினால் un thiru gunam seppa maatten,உன் திருக் குணம் செப்ப மாட்டேன் - உன்னுடைய நற் குணங்களைக் கீர்த்தநம் செய்ய மாட்டுவேனல்லேன்; kaadhalaal anbu,காதலால் அன்பு - உண்மையான பக்தியால் உண்டாகிற அபிநிவேசத்தை nenjam,நெஞ்சம் - நெஞ்சிலே kalanthilaene,கலந்திலேன் - வைத்துக் கொண்டிருக்கின்றேனில்லை; adhu thannaale,அது தன்னாலே - ஆதலால் arangarkku,அரங்கர்க்கு - அழகிய மணவாளனாகிய தேவரீர்க்கு edhilae,ஏதிலேன் - ஒரு காரணத்தாலும் ஸ்பர்சிக்கப் பெற்றவனல்லேன்; en seyvaan thoandrinaene,என் செய்வான் தோன்றினேனே - (இப்படிப்பட்ட நான்) எதற்காகப் பிறந்தேனோ (அறியேன்) elle,எல்லே - ஐயோ! |