| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 898 | திருமாலை || (திர்யக் ஜந்துக்களுக்கு உள்ள நன்மையையும் இல்லை என்கிறார்) 27 | குரங்குகள் மலையை நூக்கக் குளித்து தாம் புரண்டிட்டு ஓடித் தரங்க நீர் அடிக்கல் உற்ற சலமிலா வணிலம் போலேன் மரங்கள் போல் வலிய நெஞ்சம் வஞ்சனேன் நெஞ்சு தன்னால் அரங்கனார்கு ஆட்செய்யாதே அளியத்தேன் அயர்க்கின்றேனே | kurangugal,குரங்குகள் - வாநர வீரர்கள் (கிஞ்சித்கரித்து ஸ்வரூபம் நிறம் பெறுவதற்கு) malaiyai nookka,மலையை நூக்க - மலைகளைத் தள்ளிக் கொண்டு வர kulithu purandittu oodi,குளித்து புரண்டிட்டு ஓடி - நீரிலே முழுகி (கரையிலுள்ள உலர்ந்த மணலிலே) புரண்டு ஓடி tharangam neer adai kal uttra,தரங்கம் நீர் அடைக்கல் உற்ற - அலைக் கிளர்ச்சியை யுடைய கடலைத் தூர்க்கையிலே ஒருப்பட்ட salam ilaa,சலம் இலா - கபடமற்ற anilum polen,அணிலும் போலேன் - அணில்களையும் ஒத்திருக்கின்றேனில்லை; marangal pol valiya nenjam,மரங்கள் போல் வலிய நெஞ்சம் - மரங்களைப் போலே கடிநமான நெஞ்சை யுடையனாய் vanjanen,வஞ்சனேன் - வஞ்சநையையே தொழிலாக யுடையனாய் aliyathen,அளியத்தேன் - அருமந்த மநுஷ்யனான நான் aranganaarkku,அரங்கனார்க்கு - அழகிய மணவாளனுக்கு nenju thannaal,நெஞ்சு தன்னால் - பாவநா வ்ருத்தியாலுங்கூட aal seyyaadhae,ஆள் செய்யாதே - அடிமை செய்யாமல் ayarkinraen,அயர்க்கின்றேன் - அநர்த்தப்படா நின்றேன். |