| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 899 | திருமாலை || (ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் தான் இடர் பட்ட பொழுது நினைத்த நினைவும் இல்லை என்கிறார்) 28 | உம்பரால் அறியலாகா யொளி உளார் ஆனைக்காகிச் செம் புலால் உண்டு வாழும் முதலை மேல் சீறி வந்தார் நம்பர மாயதுண்டே நாய்களோம் சிறுமை யோரா எம்பிராற்கு ஆட் செய்யாதே என் செய்வான் தோன்றினேனே | umbaraal ariyal aaka oli ulaar,உம்பரால் அறியல் ஆகா ஒளி உளார் - தேவர்களாலும் (இவ் வகை யென்று பரிச்சேதித்து) அறிய முடியாத தேஜோ மயமான பரம பதத்தை விபூதியாக வுடைய எம்பெருமான் aanai kaagi,ஆனைக்காகி - கஜேந்திராழ்வானுக்காக sembulaal undu vaazhum mudhalai mael seeri,செம்புலால் உண்டு வாழும் முதலை மேல் சீறி - சிவந்த மாம்ஸத்தை புஜித்து வாழ்கிற முதலையின் மேலே சீற்றங்கொண்டு vandhaar,வந்தார் - (மடுவின் கரையிலே) எழுந்தருளினார். nam param aayadhu undey,நம் பரம் ஆயது உண்டே - (இப்படி ஆஸ்ரித பஷபாதியாய் ரக்ஷிக்குமவனிருக்க;) (நம்முடைய ரக்ஷணத்தில்) நமக்கொரு பழுவுண்டோ? naaykalom sirumai ora,நாய்களோம் சிறுமை ஓரா - நாய் போல் நிஷ்ருஷ்டரான நம்முடைய தண்மையை ஆராயாதவரான empiraagu,எம்பிராற்கு - எம்பெருமானுக்கு aal seyyaadhae,ஆள் செய்யாதே - அடிமை செய்யப் பெறாமல் (இருக்கிற நான்) en seyvaan thoondrinaen,என் செய்வான் தோன்றினேன் - எதுக்காக பிறந்தேன்! |