Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 899 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
899திருமாலை || (ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் தான் இடர் பட்ட பொழுது நினைத்த நினைவும் இல்லை என்கிறார்) 28
உம்பரால் அறியலாகா யொளி உளார் ஆனைக்காகிச்
செம் புலால் உண்டு வாழும் முதலை மேல் சீறி வந்தார்
நம்பர மாயதுண்டே நாய்களோம் சிறுமை யோரா
எம்பிராற்கு ஆட் செய்யாதே என் செய்வான் தோன்றினேனே
umbaraal ariyal aaka oli ulaar,உம்பரால் அறியல் ஆகா ஒளி உளார் - தேவர்களாலும் (இவ் வகை யென்று பரிச்சேதித்து) அறிய முடியாத
தேஜோ மயமான பரம பதத்தை விபூதியாக வுடைய எம்பெருமான்

aanai kaagi,ஆனைக்காகி - கஜேந்திராழ்வானுக்காக
sembulaal undu vaazhum mudhalai mael seeri,செம்புலால் உண்டு வாழும் முதலை மேல் சீறி - சிவந்த மாம்ஸத்தை புஜித்து வாழ்கிற முதலையின் மேலே சீற்றங்கொண்டு
vandhaar,வந்தார் - (மடுவின் கரையிலே) எழுந்தருளினார்.
nam param aayadhu undey,நம் பரம் ஆயது உண்டே - (இப்படி ஆஸ்ரித பஷபாதியாய் ரக்ஷிக்குமவனிருக்க;)
(நம்முடைய ரக்ஷணத்தில்) நமக்கொரு பழுவுண்டோ?

naaykalom sirumai ora,நாய்களோம் சிறுமை ஓரா - நாய் போல் நிஷ்ருஷ்டரான நம்முடைய தண்மையை ஆராயாதவரான
empiraagu,எம்பிராற்கு - எம்பெருமானுக்கு
aal seyyaadhae,ஆள் செய்யாதே - அடிமை செய்யப் பெறாமல் (இருக்கிற நான்)
en seyvaan thoondrinaen,என் செய்வான் தோன்றினேன் - எதுக்காக பிறந்தேன்!