| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 9 | திருப்பல்லாண்டு || 9 | உடுத்துக் களைந்த நின் பீதக ஆடை உடுத்து கலத்தது உண்டு தொடுத்த துழாய்மலர்சூடிக் களைந்தன சூடும் இத்தொண்டர்களோம் விடுத்த திசைக் கருமம் திருத்தித் திரு வோணத் திருவிழவில் படுத்த பைந் நாகனைப் பள்ளி கொண்டானுக்குப் பல்லாண்டு கூறுதுமே | உடுத்து, Uduthu - திருவரையில் உடுத்து களைந்த, Kalaindha - கழித்த நின், Nin - (ஸ்வாமியான) உன்னுடைய பீதக ஆடை, Peethaka Aadai - திருப்பீதாம் பரத்தை உடுத்து, Uduthu - உடுத்தும் கலத்தது, Kalathadhu - (நீ அமுது செய்த) கலத்தில் மிகுந் திருப்பதை உண்டு, Undu - உண்டும் சூடிக்களைந்தன, Soodikkalaindana - (உன்னால்) சூட்டிக்கொள்ளப்பட்டு களையப்பட்டதும் தொடுத்த, Thodutha - (உன்னுடைய அடியாரான எங்களால் ) தொடுக்கப்பட்டதுமான துழாய் மலர், Thuzhaai Malar - திருத்துழாய் மலர்களை சூடும், Soodum - சூட்டிக்கொள்ளும் இத்தொண்டர்களோம், Iththondarkalom - இப்படிப்பட்ட அடியார்களாயிருக்கிறோம் நாங்கள் விடுத்த, Vidutha - ஏவின திசைக் கருமம், Thisai Karumam - திக்கிலுள்ள காரியங்களை திருத்தி, Thiruththi - நன்றாகச்செய்து திருவோணத் திருவிழவில், Thiruvonath Thiruvizhavil - திருவோண மென்னும் திருநாளிலே படுத்த, Padutha - படுக்கப்பட்டு பை, Pai - (அதனாலே ) பணைத்த படங்களையுடைய நாக அணை, Naaga Anai - திருவனந்தாழ் வானாகிற படுக்கையிலே பள்ளி கொண்டானுக்கு, Palli Kondaanukku - திருக்கண் வளர்ந்தருளுகிற உனக்கு பல்லாண்டு கூறுதும், Pallaandu Koorudhum - திருப்பல்லாண்டு பாடுவோம் |