Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 900 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
900திருமாலை || (விலஷண தேச வாசமும் இல்லை என்கிறார்) 29
ஊரிலேன் காணி இல்லை உறவு மற்று ஒருவர் இல்லை
பாரில் நின் பாத மூலம் பற்றிலேன் பரம மூர்த்தி
கார் ஒளி வண்ணனே கண்ணனே கதறுகின்றேன்
ஆருளர் களைகண் அம்மா அரங்க மா நகர் உளானே
paariL,பாரில் - இந்தப் பூமியிலே
oor illen,ஊர் இலேன் - தேவரீர் உகந்திருக்கும் திருப்பதிகளிலே பிறக்கப் பெற்றிலேன்;
kaani illai,காணி இல்லை - (திருப்பல்லாண்டு பாடுகை முதலானவற்றுக்காக விடப்பட்ட) காணியாட்சியும் எனக்கில்லை;
uravu illai,உறவு இல்லை - பந்துக்களுமில்லை;
matru oruvar illai,மற்று ஒருவர் இல்லை - தோழன்மார் முதலானவர்களும் ஒருவருமில்லை.
nin paadam moolam,நின் பாதம் மூலம் - தேவரீருடைய திருவடிகளையும்
patru illen,பற்றிலேன் - (தஞ்சமாகப்) பற்றாதவனா யிராநின்றேன்;
paramamooruthi,பரமமூர்த்தி - மிகச் சிறந்தவனே!
kaar oli vannane,கார் ஒளி வண்ணனே - மேகத்தின் காந்திபோன்ற மேனி நிறமுடையவனே!
kannaane,கண்ணனே - ஸ்ரீ க்ருஷ்ணனே!
kadharugiren,கதறுகின்றேன் - (வேறு புகலற்று உன்னையே) கூப்பிடா நின்றேன்;
amma,அம்மா - ஸ்வாமிந்!
arangamaa nagarulaane,அரங்கமா நகருளானே!-; - உடையவன் ஆனாலும் சந்நிஹிதன் அல்லன் என்று தான் ஆறி இருக்கிறேனோ
சம்சாரத்தில் நன்மை பெற வேணும் என்று கூப்பிடுவாரும் உண்டாக கூடுமோ
என்னும் நப்பாசையாலே அன்றோ
கோயிலிலே வந்து கண் வளர்ந்து அருளுகிறது

kalai kan aar ular,களை கண் ஆர் உளர் - (உன்னை யொழிய வேறு ரக்ஷகர் யார் இருக்கிறார்!