Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 901 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
901திருமாலை || (இவை இல்லாமை மாத்ரமே அன்றியே பிறர்க்கு அநர்த்தத்தை விளைவிப்பவனாய் இரா நின்றேன் என்கிறார்) 30
மனத்திலோர் தூய்மை இல்லை வாயிலோர் இன் சொல் இல்லை
சினத்தினால் செற்றம் நோக்கித் தீ விளி விளிவன் வாளா
புனத் துழாய் மாலையானே பொன்னி சூழ் திருவரங்கா
எனக்கு இனிக் கதி என் சொல்லாய் என்னை ஆளுடைய கோவே
punam thulaai maalaiyaane,புனம் துழாய் மாலையானே - தந் நிலத்திலே வளர்ந்து செவ்விதான திருத் துழாயை மாலையாக அணிந்துள்ளவனே!
ponnii soozh thiru arangaa,பொன்னி சூழ் திரு அரங்கா - காவேரியாலே சூழப்பட்ட ஸ்ரீரங்கத்தில் சாய்ந்தருள்பவனே!
ennai aal udaiya kovae,என்னை ஆள் உடைய கோவே - அடியேனை அடிமையாகக் கொண்ட ஸ்வாமியானவனே!
manathil,மனத்தில் - (என்) மநஸ்ஸிலே
oor thooymai illai,ஓர் தூய்மை இல்லை - தெளிவு கொஞ்சமும் இல்லை;
vaayil oor in sol illai,வாயில் ஓர் இன் சொல் இல்லை - வாயிலே ஒரு நற் சொல்லும் கிடையாது;
vaalaa,வாளா - நிஷ் காரணமாக
sinathinaal,சினத்தினால் - கோபத்தாலே
setram nookki,செற்றம் நோக்கி - பகைமை தோற்றப் பார்த்து
thee vili vilivan,தீ விளி விளிவன் - மிகக் கொடுமையாக வார்த்தை சொல்லா நிற்பேன்;
enakku,எனக்கு - இப்படிப்பட்ட துர்க் குணங்கள் நிறைந்த எனக்கு
ini kadhi en sollai,இனி கதி என் சொல்லாய் - இனி மேல் என்ன கதி? அருளிச் செய்ய வேணும்.