| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 902 | திருமாலை || (நீச விஷயமான ஸ்த்ரீகளாலும் நிராகரிக்கப் பட்டேன் என்கிறார்) 31 | தவத்துள்ளார் தம்மில் அல்லேன் தனம் படைத்தாரில் அல்லேன் உவர்த்த நீர் போலே என் தன் உற்றவருக்கு ஒன்றும் அல்லேன் துவர்த்த செவ்வாயினார்க்கே துவக்கறத் துரிசனானேன் அவத்தமே பிறவி தந்தாய் அரங்க மா நகர் உளானே | arangamaa nagarulaane,அரங்கமா நகருளானே! - கர்ம பரதந்த்ரராய் விஷயாந்தர பிரவணராய் இருப்பாரை அழகாலும் சீலத்தாலும் மீட்க்கைக்கு அன்றோ கோயிலிலே வந்து கண் வளர்ந்து அருளுகிறது thavathulaar thammil allen,தவத்துளார் தம்மில் அல்லேன் - தபஸ்ஸை அனுஷ்டித்தவர்களில் thanam padaitthaaril allen,தனம் படைத்தாரில் அல்லேன் - (ததீயாராதனம் முதலியவற்றுக்காகப்) பொருள் ஸம்பாதித்தவர்களிலும் சேர்ந்தவனல்லேன்; endran utravarukku,என்றன் உற்றவர்க்கு - என்னைச் சேர்ந்தவர்களுக்கு uvartha neer pola,உவர்த்த நீர் போல - உப்புத் தண்ணீர் போல ondrum allen,ஒன்றும் அல்லேன் - ஒன்றுக்கும் உதவாதவனாயிரா நின்றேன். thuvarttha sevvaayinaarkke,துவர்த்த செவ்வாயினார்க்கே - பழுப்பேறின அதரத்தை யுடைய மாதர்கட்கும் thuvakku ara,துவக்கு அற - ஸம்பந்தம் அற்றுப் போம்படி thurisan aaneen,துரிசன் ஆனேன் - கள்ளனாயினேன் piravi avathame thandhaay,பிறவி அவத்தமே தந்தாய் - (இப்படிப்பட்ட எனக்கு) ஐந்மத்தை வ்யர்த்தமாகவே கொடுத்தாய் |