Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 902 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
902திருமாலை || (நீச விஷயமான ஸ்த்ரீகளாலும் நிராகரிக்கப் பட்டேன் என்கிறார்) 31
தவத்துள்ளார் தம்மில் அல்லேன் தனம் படைத்தாரில் அல்லேன்
உவர்த்த நீர் போலே என் தன் உற்றவருக்கு ஒன்றும் அல்லேன்
துவர்த்த செவ்வாயினார்க்கே துவக்கறத் துரிசனானேன்
அவத்தமே பிறவி தந்தாய் அரங்க மா நகர் உளானே
arangamaa nagarulaane,அரங்கமா நகருளானே! - கர்ம பரதந்த்ரராய்
விஷயாந்தர பிரவணராய் இருப்பாரை
அழகாலும் சீலத்தாலும் மீட்க்கைக்கு அன்றோ
கோயிலிலே வந்து கண் வளர்ந்து அருளுகிறது

thavathulaar thammil allen,தவத்துளார் தம்மில் அல்லேன் - தபஸ்ஸை அனுஷ்டித்தவர்களில்
thanam padaitthaaril allen,தனம் படைத்தாரில் அல்லேன் - (ததீயாராதனம் முதலியவற்றுக்காகப்) பொருள் ஸம்பாதித்தவர்களிலும் சேர்ந்தவனல்லேன்;
endran utravarukku,என்றன் உற்றவர்க்கு - என்னைச் சேர்ந்தவர்களுக்கு
uvartha neer pola,உவர்த்த நீர் போல - உப்புத் தண்ணீர் போல
ondrum allen,ஒன்றும் அல்லேன் - ஒன்றுக்கும் உதவாதவனாயிரா நின்றேன்.
thuvarttha sevvaayinaarkke,துவர்த்த செவ்வாயினார்க்கே - பழுப்பேறின அதரத்தை யுடைய மாதர்கட்கும்
thuvakku ara,துவக்கு அற - ஸம்பந்தம் அற்றுப் போம்படி
thurisan aaneen,துரிசன் ஆனேன் - கள்ளனாயினேன்
piravi avathame thandhaay,பிறவி அவத்தமே தந்தாய் - (இப்படிப்பட்ட எனக்கு) ஐந்மத்தை வ்யர்த்தமாகவே கொடுத்தாய்