| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 903 | திருமாலை || (இப்படி இருவருக்கும் ஆகாதவன் திரு முன்பே வந்து நின்றது மூர்க்கத்தனம் என்கிறார்) 32 | ஆர்த்து வண்டு அலம்பும் சோலை அணி திருவரங்கம் தன்னுள் கார்த்திரள் அனைய மேனிக் கண்ணனே உன்னைக் காணும் மார்க்கம் ஒன்றும் அறிய மாட்டா மனிசரில் துரிசனாய மூர்க்கனேன் வந்து நின்றேன் மூர்க்கனேன் மூர்க்கனேனே | vandu aarthu alampum solai ani,வண்டு ஆர்த்து அலம்பும் சோலை அணி - வண்டுகள் ஆரவாரம் செய்துகொண்டு அலைந்து கொண்டிரா நின்ற சோலைகளாலே அழகு பெற்றிருக்கிற thiruarangam thannul,திருஅரங்கம் தன்னுள் - ஸ்ரீரங்கத்திலே (பள்ளி கொண்டருளா நின்ற) kaarth thiral anaiya maeni kannane,கார்த் திரள் அனைய மேனி கண்ணனே - மேக ஸமூஹத்தை ஒத்த திருமேனியை யுடைய பெருமானே! unnai kaanum maargam ondru ariya maatta,உன்னை காணும் மார்க்கம் ஒன்று அறிய மாட்டா - உன்னை ஸாக்ஷாத்தரிக்கக் கூடிய உபாயமொன்றையும் அறிய மாட்டாதவனாய் manisaril,மனிசரில் - மனிதர்களுக்குள் thurisan aaya,துரிசன் ஆய - கள்ளனாய், moorkkaneen,மூர்க்கனேன் - பிடித்தது விடமாட்டாத மூடனாகிய அடியேன் vandu nindraeen,வந்து நின்றேன் - (வேறு புகலற்று, தேவர் திருமுன்பே) வந்து நின்றேன்; moorkkaneen moorkkaneen,மூர்க்கனேன் மூர்க்கனேன் - என்னுடைய தண்மையை நன்றாகக் கடாக்ஷித்தருள வேணுமென்றபடி. |