Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 903 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
903திருமாலை || (இப்படி இருவருக்கும் ஆகாதவன் திரு முன்பே வந்து நின்றது மூர்க்கத்தனம் என்கிறார்) 32
ஆர்த்து வண்டு அலம்பும் சோலை அணி திருவரங்கம் தன்னுள்
கார்த்திரள் அனைய மேனிக் கண்ணனே உன்னைக் காணும்
மார்க்கம் ஒன்றும் அறிய மாட்டா மனிசரில் துரிசனாய
மூர்க்கனேன் வந்து நின்றேன் மூர்க்கனேன் மூர்க்கனேனே
vandu aarthu alampum solai ani,வண்டு ஆர்த்து அலம்பும் சோலை அணி - வண்டுகள் ஆரவாரம் செய்துகொண்டு அலைந்து
கொண்டிரா நின்ற சோலைகளாலே அழகு பெற்றிருக்கிற

thiruarangam thannul,திருஅரங்கம் தன்னுள் - ஸ்ரீரங்கத்திலே (பள்ளி கொண்டருளா நின்ற)
kaarth thiral anaiya maeni kannane,கார்த் திரள் அனைய மேனி கண்ணனே - மேக ஸமூஹத்தை ஒத்த திருமேனியை யுடைய பெருமானே!
unnai kaanum maargam ondru ariya maatta,உன்னை காணும் மார்க்கம் ஒன்று அறிய மாட்டா - உன்னை ஸாக்ஷாத்தரிக்கக் கூடிய உபாயமொன்றையும் அறிய மாட்டாதவனாய்
manisaril,மனிசரில் - மனிதர்களுக்குள்
thurisan aaya,துரிசன் ஆய - கள்ளனாய்,
moorkkaneen,மூர்க்கனேன் - பிடித்தது விடமாட்டாத மூடனாகிய அடியேன்
vandu nindraeen,வந்து நின்றேன் - (வேறு புகலற்று, தேவர் திருமுன்பே) வந்து நின்றேன்;
moorkkaneen moorkkaneen,மூர்க்கனேன் மூர்க்கனேன் - என்னுடைய தண்மையை நன்றாகக் கடாக்ஷித்தருள வேணுமென்றபடி.