| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 904 | திருமாலை || (வெட்கம் கேட்டவன் நான் -என்கிறார்) 33 | மெய் எல்லாம் போகவிட்டு விரி குழலாரில் பட்டு பொய் எல்லாம் பொதிந்து கொண்ட போழ்கனேன் வந்து நின்றேன் ஐயனே அரங்கனே உன் அருள் என்னும் ஆசை தன்னால் பொய்யனேன் வந்து நின்றேன் பொய்யனேன் பொய்யனேனே | mei ellaam,மெய் எல்லாம் - மெய்யான (நினைவு, சொலவு, செயல் ஆகிய ) எல்லாவற்றையும் poga vittu,போக விட்டு - நீக்கி விட்டு viri kulalaaril pattu,விரி குழலாரில் பட்டு - விரிந்த கூந்தலை யுடைய மாதர் திறத்தில் ஆழங்காற்பட்டு (அகப்பட்டு) poi ellaam,பொய் எல்லாம் - எல்லா விதமான பொய்களையும் podhindu kond,பொதிந்து கொண்ட - நிறைத்துக் கொண்டிருக்கிற pozhkkanen,போழ்க்கனேன் - க்ருத்ரிமனான அடியேன் aiyane,ஐயனே - ஸ்வாமின்!! arangane!-;,அரங்கனே!-; - நம்மை -நிருபாதிக பந்து -என்று அறிந்தது சாஸ்திர வாசனையாலேயோ ஆச்சார்ய உபதேசத்தாலேயோ -என்ன அவைய்ற்றால் அன்று கோயிலிலே வந்து கண் வளர்ந்து அருளுகிறபடியைக் கண்டு அறிந்தேன் un arul ennum aasai thannaal,உன் அருள் என்னும் ஆசை தன்னால் - தேவரீருடைய க்ருபையிலே யுண்டான ஆசையினாலே vandu nindren-;,வந்து நின்றேன்-; - வந்து நின்றேன்-; poiyanen poiyanen poiyanen,(நான் எப்படிப்பட்டவனென்றால்) பொய்யனேன் பொய்யனேன் பொய்யனேன் - மன மொழி மெய்களாகிற மூன்று கரணங்களிலும் பொய்யன்; vandu nindren,வந்து நின்றேன் - (தேவர் திரு முன்பே வெட்க மற்று) வந்து நின்றேன். |