திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 904 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
904திருமாலை || (வெட்கம் கேட்டவன் நான் -என்கிறார்) 33
மெய் எல்லாம் போகவிட்டு விரி குழலாரில் பட்டு பொய் எல்லாம் பொதிந்து கொண்ட போழ்கனேன் வந்து நின்றேன் ஐயனே அரங்கனே உன் அருள் என்னும் ஆசை தன்னால் பொய்யனேன் வந்து நின்றேன் பொய்யனேன் பொய்யனேனே
பதவுரை Show / Hide
mei ellaam,மெய் எல்லாம் - மெய்யான (நினைவு, சொலவு, செயல் ஆகிய ) எல்லாவற்றையும்
poga vittu,போக விட்டு - நீக்கி விட்டு
viri kulalaaril pattu,விரி குழலாரில் பட்டு - விரிந்த கூந்தலை யுடைய மாதர் திறத்தில் ஆழங்காற்பட்டு (அகப்பட்டு)
poi ellaam,பொய் எல்லாம் - எல்லா விதமான பொய்களையும்
podhindu kond,பொதிந்து கொண்ட - நிறைத்துக் கொண்டிருக்கிற
pozhkkanen,போழ்க்கனேன் - க்ருத்ரிமனான அடியேன்
aiyane,ஐயனே - ஸ்வாமின்!!
arangane!-;,அரங்கனே!-; - நம்மை -நிருபாதிக பந்து -என்று அறிந்தது
சாஸ்திர வாசனையாலேயோ
ஆச்சார்ய உபதேசத்தாலேயோ -என்ன
அவைய்ற்றால் அன்று
கோயிலிலே வந்து கண் வளர்ந்து அருளுகிறபடியைக் கண்டு அறிந்தேன்

un arul ennum aasai thannaal,உன் அருள் என்னும் ஆசை தன்னால் - தேவரீருடைய க்ருபையிலே யுண்டான ஆசையினாலே
vandu nindren-;,வந்து நின்றேன்-; - வந்து நின்றேன்-;
poiyanen poiyanen poiyanen,(நான் எப்படிப்பட்டவனென்றால்) பொய்யனேன் பொய்யனேன் பொய்யனேன் - மன மொழி மெய்களாகிற மூன்று கரணங்களிலும் பொய்யன்;
vandu nindren,வந்து நின்றேன் - (தேவர் திரு முன்பே வெட்க மற்று) வந்து நின்றேன்.