Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 905 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
905திருமாலை || (இப்படிப்பட்ட நான் உன்னைக் கிட்டி உனக்கு அவத்யத்தை விளைப்பேன் அல்லேன் என்கிறார்) 34
உள்ளத்தே உறையும் மாலை யுள்ளுவார் உணர்வு ஓன்று இல்லாக்
கள்ளத்தேன் நான் உன் தொண்டாய்த் தொண்டுக்கே கோலம் பூண்டு
உள்ளுவார் உள்லிற்று எல்லாம் உடன் இருந்து அறுதி என்று
வெள்கிப் போய் என்னுள்ளே நான் விலவறச் சிரித்திட்டேனே
ullamathae uraiyum maalai,உள்ளத்தே உறையும் மாலை - நெஞ்சினுள்ளே வாஸஞ்செய்கிற எம்பெருமானாகிய உன்னை
kallathen naanum,கள்ளத்தேன் நானும் - கள்ளனாகிய அடியேனும்
thondu aay,தொண்டு ஆய் - (உன்) அடிமையிலேயே அந்வயித்தவனாய்
thondugge koolam poondu,தொண்டுக்கே கோலம் பூண்டு - அவ்வடிமைக்கு உரிய வேஷங்களை அணிந்து
(irundha podhilum) ulluvaar ullamitru ellaam,(இருந்த போதிலும்) உள்ளுவார் உள்ளிற்று எல்லாம் - சிந்திப்பவர்கள் சிந்திப்பதெல்லாவற்றையும்
ulluvaan unarvu ondru illaa,உள்ளுவான் உணர்வு ஒன்று இல்லா - சிந்திப்பதற்குறுப்பான அறிவு சிறிதும் இல்லாத
udan irundhu arithi endru,உடன் இருந்து அறிதி என்று - நீ கூடவே யிருந்து அறிகின்றாய் என்று
(naan unarndhu) naan,(நான் உணர்ந்து) நான் - நான்
en ullamae,என் உள்ளே - எனக்குள்ளே
velkip poi,வெள்கிப்போய் - மிகவும் வெட்கப் பட்டு
vilavu ara sirithittae,விலவு அற சிரித்திட்டேன் - விலாப் பக்கத்து எலும்பு முறியும்படி சிரித்தேன்.
(தொண்டுக்கே கோலம் பூண்டு வெள்கிப் போய் என்னுள்ளே
நான் விலவறச் சிரித்திட்டேன் என்று அந்வயம்)