| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 905 | திருமாலை || (இப்படிப்பட்ட நான் உன்னைக் கிட்டி உனக்கு அவத்யத்தை விளைப்பேன் அல்லேன் என்கிறார்) 34 | உள்ளத்தே உறையும் மாலை யுள்ளுவார் உணர்வு ஓன்று இல்லாக் கள்ளத்தேன் நான் உன் தொண்டாய்த் தொண்டுக்கே கோலம் பூண்டு உள்ளுவார் உள்லிற்று எல்லாம் உடன் இருந்து அறுதி என்று வெள்கிப் போய் என்னுள்ளே நான் விலவறச் சிரித்திட்டேனே | ullamathae uraiyum maalai,உள்ளத்தே உறையும் மாலை - நெஞ்சினுள்ளே வாஸஞ்செய்கிற எம்பெருமானாகிய உன்னை kallathen naanum,கள்ளத்தேன் நானும் - கள்ளனாகிய அடியேனும் thondu aay,தொண்டு ஆய் - (உன்) அடிமையிலேயே அந்வயித்தவனாய் thondugge koolam poondu,தொண்டுக்கே கோலம் பூண்டு - அவ்வடிமைக்கு உரிய வேஷங்களை அணிந்து (irundha podhilum) ulluvaar ullamitru ellaam,(இருந்த போதிலும்) உள்ளுவார் உள்ளிற்று எல்லாம் - சிந்திப்பவர்கள் சிந்திப்பதெல்லாவற்றையும் ulluvaan unarvu ondru illaa,உள்ளுவான் உணர்வு ஒன்று இல்லா - சிந்திப்பதற்குறுப்பான அறிவு சிறிதும் இல்லாத udan irundhu arithi endru,உடன் இருந்து அறிதி என்று - நீ கூடவே யிருந்து அறிகின்றாய் என்று (naan unarndhu) naan,(நான் உணர்ந்து) நான் - நான் en ullamae,என் உள்ளே - எனக்குள்ளே velkip poi,வெள்கிப்போய் - மிகவும் வெட்கப் பட்டு vilavu ara sirithittae,விலவு அற சிரித்திட்டேன் - விலாப் பக்கத்து எலும்பு முறியும்படி சிரித்தேன். (தொண்டுக்கே கோலம் பூண்டு வெள்கிப் போய் என்னுள்ளே நான் விலவறச் சிரித்திட்டேன் என்று அந்வயம்) |