Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 906 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
906திருமாலை || நீர்மையால் சேர்த்துக் கொண்டான் என்கிறார் 35
தாவி அன்று உலகம் எல்லாம் தலை விளாக் கொண்ட வெந்தாய்
சேவியேன் உன்னை அல்லால் சிக்கென செங்கண்மாலே
ஆவியே அமுதே என் தன் ஆர் உயிர் அனைய எந்தாய்
பாவியேன் உன்னை அல்லால் பாவியேன் பாவியேனே
anru,அன்று - அக் காலத்தில் (த்ரிவிக்ரமாவதாரத்தில்)
ulagam ellaam thaavi,உலகம் எல்லாம் தாவி - எல்லா உலகங்களையும் கடந்து
thalai vilaak kondu endhaay,தலை விளாக் கொண்ட எந்தாய் - (திருவடியினால்) வியாபரித்த எமது ஸ்வாமியே!
sengkanmaale,செங்கண்மாலே - சிவந்த திருக் கண்களை யுடைய திருமாலே!
aaviye,ஆவியே - (எனது உயிர் தரித்திருப்பதற்குக் காரணமான) பஞ்ச ப்ராண வாயுவானவனே!
amudhe,அமுதே - அம்ருதம் போன்றவனே!
en than aar uyir anaiya,என் தன் ஆர் உயிர் அனைய எந்தாய் - (என்னை நல் வழியிற் செல்வித்த எனது அருமையான ஆத்மாவைப் போன்ற எனது தலைவனே!
paaviyene,பாவியேன் - பாவியாகி யான்
sikkena,சிக்கென - உறுதியாக (எப்போதும் விடாமல்)
unnai allaal seviyene,உன்னை அல்லால் சேவியேன் - உன்னைத் தவிர (மற்றையோரை) வணங்க மாட்டேன்;
unnai allaal paaviyene,உன்னை அல்லால் பாவியேன் - (உன்னையல்லாது வேறொருவரை) நினைக்கவும் மாட்டேன்
paaviyene,பாவியேனே - நான் பாவியனேயாவேன்