| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 906 | திருமாலை || நீர்மையால் சேர்த்துக் கொண்டான் என்கிறார் 35 | தாவி அன்று உலகம் எல்லாம் தலை விளாக் கொண்ட வெந்தாய் சேவியேன் உன்னை அல்லால் சிக்கென செங்கண்மாலே ஆவியே அமுதே என் தன் ஆர் உயிர் அனைய எந்தாய் பாவியேன் உன்னை அல்லால் பாவியேன் பாவியேனே | anru,அன்று - அக் காலத்தில் (த்ரிவிக்ரமாவதாரத்தில்) ulagam ellaam thaavi,உலகம் எல்லாம் தாவி - எல்லா உலகங்களையும் கடந்து thalai vilaak kondu endhaay,தலை விளாக் கொண்ட எந்தாய் - (திருவடியினால்) வியாபரித்த எமது ஸ்வாமியே! sengkanmaale,செங்கண்மாலே - சிவந்த திருக் கண்களை யுடைய திருமாலே! aaviye,ஆவியே - (எனது உயிர் தரித்திருப்பதற்குக் காரணமான) பஞ்ச ப்ராண வாயுவானவனே! amudhe,அமுதே - அம்ருதம் போன்றவனே! en than aar uyir anaiya,என் தன் ஆர் உயிர் அனைய எந்தாய் - (என்னை நல் வழியிற் செல்வித்த எனது அருமையான ஆத்மாவைப் போன்ற எனது தலைவனே! paaviyene,பாவியேன் - பாவியாகி யான் sikkena,சிக்கென - உறுதியாக (எப்போதும் விடாமல்) unnai allaal seviyene,உன்னை அல்லால் சேவியேன் - உன்னைத் தவிர (மற்றையோரை) வணங்க மாட்டேன்; unnai allaal paaviyene,உன்னை அல்லால் பாவியேன் - (உன்னையல்லாது வேறொருவரை) நினைக்கவும் மாட்டேன் paaviyene,பாவியேனே - நான் பாவியனேயாவேன் |