| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 907 | திருமாலை || (விசேஷ கடாஷம் பண்ண வேண்டும் என்று கதறுகிறார்) 36 | மழைக்கன்று வரை முன் ஏந்தும் மைந்தனே மதுரவாறே உழைக்கன்றே போல நோக்கம் உடையவர் வலையில் பட்டு உழைக்கின்றேற்கு என்னை நோக்காது ஒழிவதே யுன்னை என்னே அழைக்கின்றேன் ஆதி மூர்த்தி அரங்க மா நகர் உளானே | anru,அன்று - (இந்திரன் பசிக் கோபத்தாலே ஏழு நாள் விடா மழை பெய்வித்த) அக் காலத்திலே mun,முன் - (பசு முதலியவை மழையினால் கஷ்டமடைவதற்கு) முன்பாகவே mazhaikku,மழைக்கு - மழையைத் தடுப்பதற்காக varai aendhum maindhaney,வரை ஏந்தும் மைந்தனே - கோவர்த்தன பர்வதத்தை (கையில் குடையாக) ஏந்திய மிடுக்கை யுடையவனே! madhura aare,மதுர ஆறே - இனிய ஆறு போல் எல்லார்க்கும் விடாயைத் தீர்ப்பவனே! uzhaik kandrau pola noakkam udaiyar,உழைக் கன்று போல நோக்கம் உடையவர் - மான் குட்டியின் விழி போன்ற விழியை யுடைய மாதர்களின் valaiyul,வலையுள் - (அந்த நோக்காகிற) வலையினுள்ளே pattu,பட்டு - அகப்பட்டு uzhaikkintreku ennai,உழைக்கின்றேற்கு என்னை - துடிக்கிற என்னை noakka thozhivadhae,நோக்கா தொழிவதே - கடாக்ஷியாம லிருப்பதும் தகுதியோ? aadhi moorthi,ஆதி மூர்த்தி - முழு முதற் கடவுளே! arangamaa nagarulaane,அரங்கமா நகருளானே!-; - பரம பதத்தை விட்டு கோயிலிலே கண் வளர்ந்து அருளுகிறது என்னுடைய ரஷணம் பண்ண அல்லவாகில் – இக் கிடைக்கு வேறு ஒரு பிரயோஜனம் உண்டோ unnai andrae,உன்னை அன்றே - தேவரீரை நோக்கி யன்றோ azhaikkindraen,அழைக்கின்றேன் - நான் கூப்பிடா நின்றேன். |