| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 908 | திருமாலை || (அந்த விசேஷ கடாஷம் பெறாமல் அலை பாய்ந்தார்) 37 | தெளிவிலாக் கலங்கல் நீர் சூழ் திரு வரங்கத்துள் ஓங்கும் ஒளி யுளார் தாமே அன்றே தந்தையும் தாயும் ஆவார் எளியதோர் அருளும் அன்றே என் திறத்து எம்பிரானார் அளிய நம் பையல் என்னார் அம்மாவோ கொடியவாறே | thelivu ila kalangal neer soozh,தெளிவு இலா கலங்கல் நீர் சூழ் - (ஒரு காலும்) தெளிவில்லாமல் கலக்கம் மாறாதிருக்கிற காவேரியாலே சூழப் பெற்ற thiru arangathul,திரு அரங்கத்துள் - கோயிலிலே oongum,ஓங்கும் - விஞ்சி யிருக்கிற oli ular thaamae andre,ஒளி உளார் தாமே அன்றே - தேஜஸ்ஸை உடையவரான அழகிய மணவாளனொருனே யன்றே thandhayum thaayum aavaar,தந்தையும் தாயும் ஆவார் - (நமக்குத்) தகப்பனும் தாயுமாயிருப்பர்; en thirathu,என் திறத்து - (அவர்) என் விஷயத்தில் (செய்தருள வேண்டுவது) eliyathu or arulum andrae,எளியது ஓர் அருளும் அன்றே - ஸாமான்யமான ஒரு க்ருபா மாத்திரமே யன்றே? empiraanaar,எம்பிரானார் - எனக்கு உபகாரகரான அவர் nam paiyal aliyan ennaar,நம் பையல் அளியன் என்னார் - “நம்முடைய பையலான இவன் நமது கருணைக்கு உரியன்” என்று திருவுள்ளம் பற்றுகிறாரில்லை; amma o kodiya aare,அம்ம ஓ கொடிய ஆறே - கொடுமையா யிராநின்ற தீ! |