திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 908 | திருமாலை || (அந்த விசேஷ கடாஷம் பெறாமல் அலை பாய்ந்தார்) 37 | தெளிவிலாக் கலங்கல் நீர் சூழ் திரு வரங்கத்துள் ஓங்கும்
ஒளி யுளார் தாமே அன்றே தந்தையும் தாயும் ஆவார்
எளியதோர் அருளும் அன்றே என் திறத்து எம்பிரானார்
அளிய நம் பையல் என்னார் அம்மாவோ கொடியவாறே | பதவுரை Show / Hidethelivu ila kalangal neer soozh,தெளிவு இலா கலங்கல் நீர் சூழ் - (ஒரு காலும்) தெளிவில்லாமல் கலக்கம் மாறாதிருக்கிற காவேரியாலே சூழப் பெற்ற thiru arangathul,திரு அரங்கத்துள் - கோயிலிலே oongum,ஓங்கும் - விஞ்சி யிருக்கிற oli ular thaamae andre,ஒளி உளார் தாமே அன்றே - தேஜஸ்ஸை உடையவரான அழகிய மணவாளனொருனே யன்றே thandhayum thaayum aavaar,தந்தையும் தாயும் ஆவார் - (நமக்குத்) தகப்பனும் தாயுமாயிருப்பர்; en thirathu,என் திறத்து - (அவர்) என் விஷயத்தில் (செய்தருள வேண்டுவது) eliyathu or arulum andrae,எளியது ஓர் அருளும் அன்றே - ஸாமான்யமான ஒரு க்ருபா மாத்திரமே யன்றே? empiraanaar,எம்பிரானார் - எனக்கு உபகாரகரான அவர் nam paiyal aliyan ennaar,நம் பையல் அளியன் என்னார் - “நம்முடைய பையலான இவன் நமது கருணைக்கு உரியன்” என்று திருவுள்ளம் பற்றுகிறாரில்லை; amma o kodiya aare,அம்ம ஓ கொடிய ஆறே - கொடுமையா யிராநின்ற தீ! |