Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 909 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
909திருமாலை || (இப்படி என்னை போல் பதறுகின்ற தொண்டரை உகக்குமவன் நீ என்கிறார்) 38
மேம் பொருள் போக விட்டு மெய்ம்மையை மிக உணர்ந்து
ஆம் பரிசறிந்து கொண்டு ஐம் புலன் அகத்தடக்கிக்
காம்பறத் தலை சிரைத்து உன் கடைத் தலை இருந்து வாழும்
சோம்பரை உகத்தி போலும் சூழ் புனல் அரங்கத்தானே
punal soozi arangathaane,புனல் சூழ் அரங்கத்தானே - காவிரி சூழ்ந்த கோயிலிலே கண் வளர்ந்தருளுமவனே!
maemporul,மேம்பொருள் - (ப்ராக்ருத ஜநங்கள்) விரும்புகிற லெளகிக பதார்த்தங்களை
poga vittu,போக விட்டு - வாஸநையோடு விட்டிட்டு
meymmeyai,மெய்ம்மையை - ஆத்ம ஸ்வரூபத்தை
miga unarndhu,மிக உணர்ந்து - உள்ளபடி அறிந்து
aam parisu,ஆம் பரிசு - ஸ்வரூபாநுரூபமான ஸமாசாரங்களையும்
arindhu kondu,அறிந்து கொண்டு - தெரிந்து கொண்டு
aimbulan,ஐம்புலன் - ஐந்து இந்திரியங்களையும்
agathu adakki,அகத்து அடக்கி - (விஷயாந்தரங்களில் போக வொட்டாமல்) தம்முள்ளே பதிய அடக்கி,
kaambu ara,காம்பு அற - அடியோடே
thalai siraittu,தலை சிரைத்து - தன் தலையிலுள்ள சுமையைத் தொலைத்து
unn thalaik kada irundhu,உன் தலைக் கடை இருந்து - உனது திரு வாசலிலே (காவலாளராக) வாஸஞ்செய்து
vaazhum,வாழும் - உஜ்ஜீவிக்கின்ற
soomparai,சோம்பரை - (தம்முடைய ஹிதத்தில்) சோம்பி யிருக்குமவர்களை
ugathu polum,உகத்தி போலும் - உகக்குமவனல்லையோ நீ.