| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 909 | திருமாலை || (இப்படி என்னை போல் பதறுகின்ற தொண்டரை உகக்குமவன் நீ என்கிறார்) 38 | மேம் பொருள் போக விட்டு மெய்ம்மையை மிக உணர்ந்து ஆம் பரிசறிந்து கொண்டு ஐம் புலன் அகத்தடக்கிக் காம்பறத் தலை சிரைத்து உன் கடைத் தலை இருந்து வாழும் சோம்பரை உகத்தி போலும் சூழ் புனல் அரங்கத்தானே | punal soozi arangathaane,புனல் சூழ் அரங்கத்தானே - காவிரி சூழ்ந்த கோயிலிலே கண் வளர்ந்தருளுமவனே! maemporul,மேம்பொருள் - (ப்ராக்ருத ஜநங்கள்) விரும்புகிற லெளகிக பதார்த்தங்களை poga vittu,போக விட்டு - வாஸநையோடு விட்டிட்டு meymmeyai,மெய்ம்மையை - ஆத்ம ஸ்வரூபத்தை miga unarndhu,மிக உணர்ந்து - உள்ளபடி அறிந்து aam parisu,ஆம் பரிசு - ஸ்வரூபாநுரூபமான ஸமாசாரங்களையும் arindhu kondu,அறிந்து கொண்டு - தெரிந்து கொண்டு aimbulan,ஐம்புலன் - ஐந்து இந்திரியங்களையும் agathu adakki,அகத்து அடக்கி - (விஷயாந்தரங்களில் போக வொட்டாமல்) தம்முள்ளே பதிய அடக்கி, kaambu ara,காம்பு அற - அடியோடே thalai siraittu,தலை சிரைத்து - தன் தலையிலுள்ள சுமையைத் தொலைத்து unn thalaik kada irundhu,உன் தலைக் கடை இருந்து - உனது திரு வாசலிலே (காவலாளராக) வாஸஞ்செய்து vaazhum,வாழும் - உஜ்ஜீவிக்கின்ற soomparai,சோம்பரை - (தம்முடைய ஹிதத்தில்) சோம்பி யிருக்குமவர்களை ugathu polum,உகத்தி போலும் - உகக்குமவனல்லையோ நீ. |