| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 910 | திருமாலை || (அவர்களுக்கு பிறப்பின் தாழ்வால் ஒரு குறையும் இல்லை என்கிறார்) 39 | அடிமையில் குடிமை யில்லா அயல் சதுப் பேதிமாரில் குடிமையில் கடமை பட்ட குக்கரில் பிறப்பரேலும் முடியினில் துளபம் வைத்தாய் மொய் கழற்கு அன்பு செய்யும் அடியரை உகத்தி போலும் அரங்க மா நகர் உளானே | mutiyinil thulapam vaithaai,முடியினில் துளபம் வைத்தாய் - திரு முடியிலே திருத் துழாய் மாலையை அணிந்தவனே arangam maa nagar ulaane,அரங்கம் மா நகர் உளானே!-: - நிஹீன ஜன்மாக்களாய் உனக்கு நல்லராய் இருப்பார்க்கு முகம் கொடுக்கைக்கு அன்றோ இங்கு வந்து கண் வளர்ந்து அருளுகிறது – உத்க்ருஷ்டருக்கு முகம் கொடுக்கும் இடத்தில் பரம பதத்திலே இருக்க அமையாதோ adimaiyil,அடிமையில் - (உனக்குக்) கைங்கரியம் செய்வதில் kudimai illa,குடிமை இல்லா - உயிர் குடிப் பிறப்பிற்கு ஏற்ற ஒழுக்கமில்லாத ayal,அயல் - (அடிமைக்கு) அயலான sadhuppaedhimaaril,சதுப்பேதிமாரில் - நான்கு வேதங்களையு மோதின அந்தணர்களைக் காட்டிலும். kudimaiyil kadai mai patta,குடிமையில் கடைமை பட்ட - குடிப் பிறப்பினால் இழிவடைந்த இழிமுலத்திற் (பிறந்த மிகவும்) kookkaril,குக்கரில் - பரம சண்டாள ஜாதியில் pirappar yenum,பிறப்பர் ஏனும் - பிறப்பர்களானாலும் moy kalarku,மொய் கழற்கு - (உனது) நெருங்கிய திருவடிகளிடத்து anbu seyyum,அன்பு செய்யும் - பக்தி செய்கின்ற adiyarai,அடியரை - அடியார்களையே ugaththi poalum,உகத்தி போலும் - நீ விரும்புவாய் போலும் |