| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 911 | திருமாலை || (அவர்களுக்கு பர ஹிம்சை முதலிய கொடிய கருமங்களின் பலன் அனுபவிக்க வேண்டா என்கிறார்) 40 | திரு மறு மார்வ நின்னைச் சிந்தையுள் திகழ வைத்து மருவிய மனத்தராகில் மா நிலத்து உயிர்கள் எல்லாம் வெருவறக் கொன்று சுட்டிட் டீட்டிய வினையரேலும் அருவினைப் பயனது உய்யார் அரங்க மா நகர் உளானே | thiru maru maarba,திரு மறு மார்ப - பெரிய பிராட்டியாரையும் ஸ்ரீவத்ஸமென்கிற மறுவையும் திரு மார்பிலே அணிந்துள்ளவனே arangamaa nagarulaane,அரங்கமா நகருளானே!-; - இவை எல்லாம் அவதார சமயங்களிலே அன்றோ என்ன ஒண்ணாத படி அவதாரத்தில் பிற்பாடர்க்கு ஆக வன்றோ கோயிலிலே வந்து கண் வளர்ந்து அருளுவது maa nilathu uyirgal ellaam,மா நிலத்து உயிர்கள் எல்லாம் - (இந்தப்) பெரிய பூ மண்டலத்திலே உள்ள ஜீவ ராசிகளெல்லாம் veruvu ura,வெருவு உற - (ஜகத் தெல்லாம்) நடுங்கும்படி konru suttittu,கொன்று சுட்டிட்டு - பர ஹிம்ஸை பண்ணி eittiya vinaiyar elum,ஈட்டிய வினையர் எலும் - விசேஷமாக ஸம்பாதிக்ப்பட்ட பாவங்களை யுடையவர்களானாலும் ninnai sindhaiyil thigazha vaithu,நின்னை சிந்தையில் திகழ வைத்து - உன்னை (தங்கள்) நெஞ்சில் விளங்கும்படி வைத்து maruviya manathar aagil,மருவிய மனத்தர் ஆகில் - த்ருடமான அத்ய வஸாயத்தை உடையராயிருப்பரேயானால் (அவர்கள்) aruvinai payan adhu uyyaar,அருவினை பயன் அது உய்யார் - (தாங்கள் செய்த) மஹா பாதகங்களினுடைய பலனை அநுபவிக்க மாட்டார்கள் |