திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 912 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
912திருமாலை || (அவர்கள் தங்களோடு சம்பந்தம் பெற்றோரையும் பரிசுத்தம் ஆக்குமவர் என்கிறார்) 41
வானுளார் அறியலாகா வானவா என்பாராகில் தேனுளாம் துளப மாலைச் சென்னியா என்பராகில் ஊன மாயினகள் செய்யும் ஊன காரகர்கள் ஏனும் போனகம் செய்த சேடம் தருவரேல் புனிதம் அன்றே
பதவுரை Show / Hide
oonam aayinagal seyyum,ஊனம் ஆயினகள் செய்யும் - தாங்கள் நிஹீநமான செயல்களைச் செய்யுமவர்களாயும்.
oona kaarakargal enum,ஊன காரகர்கள் ஏனும் - பிறரைக் கொண்டு நஹீநமான க்ருத்யங்களைச் செய்விப்பவர்களாயுமிருந்த போதிலும்.
vaan ulaar ariyal aaga vaanavaa enbar aagil,வான் உளார் அறியல் ஆகா வானவா என்பர் ஆகில் - மேலுலகத்திலுள்ள பிரமன் முதலியோராலும் அறிய முடியாத தேவனே, என்று அநுஸந்திப்பராகில்.
thaen ulaam thulabam maalai senniyaa enpar aagil,தேன் உலாம் துளபம் மாலை சென்னியா என்பர் ஆகில் - ‘தேன் பெருகா நின்ற திருத் துழாய் மாலையைத் திரு முடியிலே அணியுமவனே! என்று அநுஸந்திப்பாராகில்
poonagam seytha sedam,போனகம் செய்த சேடம் - (அப்படிப்பட்ட மஹாத்துமாக்கள்) தாங்கள் அமுது செய்து மிகுந்த பிரஸாதத்தை
tharuvar ael andrae,தருவர் ஏல் அன்றே - அநுக்ரஹிப்பாரானால் அப்போதே
punitham,புனிதம் - (அந்த ப்ரஸாதத்தைப் பெற்றவர்கள்) பரிசுத்தராவர்கள்