| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 912 | திருமாலை || (அவர்கள் தங்களோடு சம்பந்தம் பெற்றோரையும் பரிசுத்தம் ஆக்குமவர் என்கிறார்) 41 | வானுளார் அறியலாகா வானவா என்பாராகில் தேனுளாம் துளப மாலைச் சென்னியா என்பராகில் ஊன மாயினகள் செய்யும் ஊன காரகர்கள் ஏனும் போனகம் செய்த சேடம் தருவரேல் புனிதம் அன்றே | oonam aayinagal seyyum,ஊனம் ஆயினகள் செய்யும் - தாங்கள் நிஹீநமான செயல்களைச் செய்யுமவர்களாயும். oona kaarakargal enum,ஊன காரகர்கள் ஏனும் - பிறரைக் கொண்டு நஹீநமான க்ருத்யங்களைச் செய்விப்பவர்களாயுமிருந்த போதிலும். vaan ulaar ariyal aaga vaanavaa enbar aagil,வான் உளார் அறியல் ஆகா வானவா என்பர் ஆகில் - மேலுலகத்திலுள்ள பிரமன் முதலியோராலும் அறிய முடியாத தேவனே, என்று அநுஸந்திப்பராகில். thaen ulaam thulabam maalai senniyaa enpar aagil,தேன் உலாம் துளபம் மாலை சென்னியா என்பர் ஆகில் - ‘தேன் பெருகா நின்ற திருத் துழாய் மாலையைத் திரு முடியிலே அணியுமவனே! என்று அநுஸந்திப்பாராகில் poonagam seytha sedam,போனகம் செய்த சேடம் - (அப்படிப்பட்ட மஹாத்துமாக்கள்) தாங்கள் அமுது செய்து மிகுந்த பிரஸாதத்தை tharuvar ael andrae,தருவர் ஏல் அன்றே - அநுக்ரஹிப்பாரானால் அப்போதே punitham,புனிதம் - (அந்த ப்ரஸாதத்தைப் பெற்றவர்கள்) பரிசுத்தராவர்கள் |