Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 913 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
913திருமாலை || (அவர்கள் எம்பெருமானைப் போலே பூஜிக்க தக்கவர் என்கிறார்) 42
பழுதிலா வொழுகலாற்றுப் பல சதுப்பேதிமார்கள்
இழி குலத்தவர்கள் ஏலும் எம் அடியார்கள் ஆகில்
தொழுமினீர் கொடுமின் கொண்மின் என்று நின்னோடும் ஒக்க
வழிபட்டு அருளினாய் போல் மதிள் திருவரங்கத்தானே
madhil thiruvarangathaane!-;,மதிள் திருவரங்கத்தானே!-; - உபதேச மாத்ரமாய்ப் போகாதே கோயிலிலே வந்து
லோக சாரங்க மகா முனிகள் தலையிலே திருப் பாண் ஆழ்வாரை அழைத்து
இவ்வர்த்தத்தை வ்யாபரித்து காட்டிற்று இலீரோ

கோயிலிலே மதிளைக் கடக்கில் அன்றோ
தேவரீர் காட்டின இம் மரியாதையைக் கடக்கலாவது

ozhugal aaru,ஒழுகல் ஆறு - பிரமன் முதல் தங்களளவும் நீண்டு வருகிற பரம்பரையில்
paludhu ilaa,பழுது இலா - ஒரு குற்றமு மற்றிருக்குமவர்களாய்
pala sadhupethimaargal,பல சதுப்பேதிமார்கள் - நான்கு வேதங்களையும் ஓதினவர்களாயுமுள்ளவர்களே!
em adiyaargal aagil,எம் அடியார்கள் ஆகில் - “நமக்கு அடிமைப்பட்டவர் களாயிருந்தால் (அவர்கள்)
izhi kulathavargalenum,இழி குலத்தவர்களேனும் - தாழ்ந்த வகுப்பில் பிறந்தார்களே யாகிலும்
neer,நீர் - நீங்கள்
thozhumin,தொழுமின் - (அவர்களைத்) தொழுங்கள்;
kodumin,கொடுமின் - (உங்களிடத்திலுள்ள விசேஷார்த்தங்களை அவர்களுக்கு) உபதேசியுங்கள்;
kolmin,கொள்மின் - (அவர்களிடத்தில் விசேஷார்த்தங்க ளுண்டாகில் கேட்டுக் கொள்ளுங்கள்
endru,என்று - என்று உபதேசித்தருளி
ninnoadum okka,நின்னோடும் ஒக்க - உனக்கு ஸமமாக
vazhipada,வழிபட - அவர்களை ஆராதிக்கும்படி
arulinay,அருளினாய் - உரைத்தருளினாய்
pola,போல - (போல்-அசை).