| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 913 | திருமாலை || (அவர்கள் எம்பெருமானைப் போலே பூஜிக்க தக்கவர் என்கிறார்) 42 | பழுதிலா வொழுகலாற்றுப் பல சதுப்பேதிமார்கள் இழி குலத்தவர்கள் ஏலும் எம் அடியார்கள் ஆகில் தொழுமினீர் கொடுமின் கொண்மின் என்று நின்னோடும் ஒக்க வழிபட்டு அருளினாய் போல் மதிள் திருவரங்கத்தானே | madhil thiruvarangathaane!-;,மதிள் திருவரங்கத்தானே!-; - உபதேச மாத்ரமாய்ப் போகாதே கோயிலிலே வந்து லோக சாரங்க மகா முனிகள் தலையிலே திருப் பாண் ஆழ்வாரை அழைத்து இவ்வர்த்தத்தை வ்யாபரித்து காட்டிற்று இலீரோ கோயிலிலே மதிளைக் கடக்கில் அன்றோ தேவரீர் காட்டின இம் மரியாதையைக் கடக்கலாவது ozhugal aaru,ஒழுகல் ஆறு - பிரமன் முதல் தங்களளவும் நீண்டு வருகிற பரம்பரையில் paludhu ilaa,பழுது இலா - ஒரு குற்றமு மற்றிருக்குமவர்களாய் pala sadhupethimaargal,பல சதுப்பேதிமார்கள் - நான்கு வேதங்களையும் ஓதினவர்களாயுமுள்ளவர்களே! em adiyaargal aagil,எம் அடியார்கள் ஆகில் - “நமக்கு அடிமைப்பட்டவர் களாயிருந்தால் (அவர்கள்) izhi kulathavargalenum,இழி குலத்தவர்களேனும் - தாழ்ந்த வகுப்பில் பிறந்தார்களே யாகிலும் neer,நீர் - நீங்கள் thozhumin,தொழுமின் - (அவர்களைத்) தொழுங்கள்; kodumin,கொடுமின் - (உங்களிடத்திலுள்ள விசேஷார்த்தங்களை அவர்களுக்கு) உபதேசியுங்கள்; kolmin,கொள்மின் - (அவர்களிடத்தில் விசேஷார்த்தங்க ளுண்டாகில் கேட்டுக் கொள்ளுங்கள் endru,என்று - என்று உபதேசித்தருளி ninnoadum okka,நின்னோடும் ஒக்க - உனக்கு ஸமமாக vazhipada,வழிபட - அவர்களை ஆராதிக்கும்படி arulinay,அருளினாய் - உரைத்தருளினாய் pola,போல - (போல்-அசை). |