திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 914 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
914திருமாலை || (பிறப்பையும் நடத்தையும் கொண்டு அவர்களை இழிவாக நினைப்பவர்கள் சண்டாளர் என்கிறார்) 43
அமர ஓர் அங்கம் ஆறும் வேதம் ஓர் நான்கும் ஓதித் தமர்களில் தலைவராய சாதி அந்தணர்கள் ஏலும் நுமர்களைப் பழிப்பர் ஆகில் நொடிப்பது ஓர் அளவில் ஆங்கே அவர்கள் தாம் புலையர் போலும் அரங்க மா நகர் உளானே
பதவுரை Show / Hide
arangamaa nakarulaane!-;,அரங்கமா நகருளானே!-; - அரங்கமா நகருளானே!-
oor angam aarum,ஓர் அங்கம் ஆறும் - (வேதத்தின்) விலக்ஷணமான ஆறு அங்கங்களையும்
oor vaetham naangu,ஓர் வேதம் நான்கும் - நான்கு வேதங்களையும்
amara oadhi,அமர ஓதி - நெஞ்சில் பதியும்படி அதிகரித்து
thamargalil thalaivar aaya,தமர்களில் தலைவர் ஆய - பாகவதர்களுக்குள்ளே முதன்மையான
saadhi andhanargalenum,சாதி அந்தணர்களேனும் - ப்ராஹ்மண ஜாதீயர்களாயினும் (அவர்கள்
numargalai,நுமர்களை - தேவரீருடைய ஜந்மத்தைப்
pazhippar aagil,பழிப்பர் ஆகில் - (அவர்களுடைய ஜந்மத்தைப் பார்த்து) தூஷிப்பாராகில்
nodippadhu or alavil,நொடிப்பது ஓர் அளவில் - ஒரு நிமிஷ காலத்துக்குள்ளே
avargal thaam,அவர்கள் தாம் - அந்த ஜாதி ப்ராஹ்மணர்கள் தாம்
aangae,ஆங்கே - அப்போதே
pulaiyar,புலையர் - சண்டாளராவர்கள்
Polum,போலும் - (போலும்-வாக்யாலங்காரம்.)