| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 914 | திருமாலை || (பிறப்பையும் நடத்தையும் கொண்டு அவர்களை இழிவாக நினைப்பவர்கள் சண்டாளர் என்கிறார்) 43 | அமர ஓர் அங்கம் ஆறும் வேதம் ஓர் நான்கும் ஓதித் தமர்களில் தலைவராய சாதி அந்தணர்கள் ஏலும் நுமர்களைப் பழிப்பர் ஆகில் நொடிப்பது ஓர் அளவில் ஆங்கே அவர்கள் தாம் புலையர் போலும் அரங்க மா நகர் உளானே | arangamaa nakarulaane!-;,அரங்கமா நகருளானே!-; - அரங்கமா நகருளானே!- oor angam aarum,ஓர் அங்கம் ஆறும் - (வேதத்தின்) விலக்ஷணமான ஆறு அங்கங்களையும் oor vaetham naangu,ஓர் வேதம் நான்கும் - நான்கு வேதங்களையும் amara oadhi,அமர ஓதி - நெஞ்சில் பதியும்படி அதிகரித்து thamargalil thalaivar aaya,தமர்களில் தலைவர் ஆய - பாகவதர்களுக்குள்ளே முதன்மையான saadhi andhanargalenum,சாதி அந்தணர்களேனும் - ப்ராஹ்மண ஜாதீயர்களாயினும் (அவர்கள் numargalai,நுமர்களை - தேவரீருடைய ஜந்மத்தைப் pazhippar aagil,பழிப்பர் ஆகில் - (அவர்களுடைய ஜந்மத்தைப் பார்த்து) தூஷிப்பாராகில் nodippadhu or alavil,நொடிப்பது ஓர் அளவில் - ஒரு நிமிஷ காலத்துக்குள்ளே avargal thaam,அவர்கள் தாம் - அந்த ஜாதி ப்ராஹ்மணர்கள் தாம் aangae,ஆங்கே - அப்போதே pulaiyar,புலையர் - சண்டாளராவர்கள் Polum,போலும் - (போலும்-வாக்யாலங்காரம்.) |