Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 915 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
915திருமாலை || (பிரமன் முதலியோருக்கும் அரிதான பேற்றை ஒரு திர்யக் ஜந்துவுக்கு அருள் செய்தமையைக் கூறுகிறார்) 44
பெண்ணுலாம் சடையினானும் பிரமனும் உன்னைக் காண்பான்
எண்ணிலா யூழி யூழி தவம் செய்தார் வெள்கி நிற்ப
விண்ணுளார் வியப்ப வந்து ஆனைக்கு அன்று அருளை ஈந்த
கண்ணுறா வுன்னை என்னோ களை கணாக் கருதுமாறே
pen ulam chatiyinanum,பெண் உலாம் சடையினானும் - கங்கா நதி உலாவுகின்ற சடையை யுடையனான சிவனும்
piramanum,பிரமனும் - நான் முகக் கடவுளும்
unnai kanban,உன்னைக் காண்பான் - உன்னைக் காண்பதற்காக
en ila uli uli,எண் இலா ஊழி ஊழி - எண்ண முடியாத நெடுங்காலமாக
thavam seithar,தவம் செய்தார் - தவம் புரிந்தவர்களாய் (அவ் வளவிலும் காணப் பெறாமையாலே)
velki nirpa,வெள்கி நிற்ப - வெட்கமடைந்து கவிழ்தலை யிட்டிருக்க
anru,அன்று - அக் காலத்திலே
aanai kuu,ஆனைக்கு - (முதலை வாயிலகப்பட்ட) ஸ்ரீகஜேந்த்ராழ்வானுக்காக
vantu,வந்து - (மடுவின் கரையில்) எழுந்தருளி
vin ulaar viyappa arulai eentha,விண் உளார் வியப்ப அருளை ஈந்த - நித்ய ஸூரிகளும் ஆச்சிரியப்படும்படி பரம க்ருபையைச் செய்தருளிய
kannarai,கண்ணறாய் - (என்னிடத்து அருள் செய்யாமையாலே) தயவில்லாதவனே!
unnai,உன்னை - உன்னை
kalai kana,களை கணா - தஞ்சமாக
karutum aaru enno,கருதும் ஆறு என்னோ - நினைக்கலாகுமோ?