| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 915 | திருமாலை || (பிரமன் முதலியோருக்கும் அரிதான பேற்றை ஒரு திர்யக் ஜந்துவுக்கு அருள் செய்தமையைக் கூறுகிறார்) 44 | பெண்ணுலாம் சடையினானும் பிரமனும் உன்னைக் காண்பான் எண்ணிலா யூழி யூழி தவம் செய்தார் வெள்கி நிற்ப விண்ணுளார் வியப்ப வந்து ஆனைக்கு அன்று அருளை ஈந்த கண்ணுறா வுன்னை என்னோ களை கணாக் கருதுமாறே | pen ulam chatiyinanum,பெண் உலாம் சடையினானும் - கங்கா நதி உலாவுகின்ற சடையை யுடையனான சிவனும் piramanum,பிரமனும் - நான் முகக் கடவுளும் unnai kanban,உன்னைக் காண்பான் - உன்னைக் காண்பதற்காக en ila uli uli,எண் இலா ஊழி ஊழி - எண்ண முடியாத நெடுங்காலமாக thavam seithar,தவம் செய்தார் - தவம் புரிந்தவர்களாய் (அவ் வளவிலும் காணப் பெறாமையாலே) velki nirpa,வெள்கி நிற்ப - வெட்கமடைந்து கவிழ்தலை யிட்டிருக்க anru,அன்று - அக் காலத்திலே aanai kuu,ஆனைக்கு - (முதலை வாயிலகப்பட்ட) ஸ்ரீகஜேந்த்ராழ்வானுக்காக vantu,வந்து - (மடுவின் கரையில்) எழுந்தருளி vin ulaar viyappa arulai eentha,விண் உளார் வியப்ப அருளை ஈந்த - நித்ய ஸூரிகளும் ஆச்சிரியப்படும்படி பரம க்ருபையைச் செய்தருளிய kannarai,கண்ணறாய் - (என்னிடத்து அருள் செய்யாமையாலே) தயவில்லாதவனே! unnai,உன்னை - உன்னை kalai kana,களை கணா - தஞ்சமாக karutum aaru enno,கருதும் ஆறு என்னோ - நினைக்கலாகுமோ? |