Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 916 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
916திருமாலை || (இப் பிரபந்தத்தில் எம்பெருமானுக்கு உள்ள போக்யதையை வெளி இட்டார்) 45
வள வெழும் தவள மாட மதுரை மா நகரம் தன்னுள்
கவளமால் யானை கொன்ற கண்ணனை யரங்க மாலைத்
துளவத் தொண்டைய தொல் சீர்த் தொண்டர் அடிப் பொடி சொல்
இளைய புன் கவிதை ஏலும் எம்பிராற்கு இனியவாறே
valam elum thavalam maadam,வளம் எழும் தவளம் மாடம் - அழகு விஞ்சியிருப்பதும் வெண்ணிறமுடையதுமான மாடங்களை யுடைய
ma madhurai nagaram thannul,மா மதுரை நகரம் தன்னுள் - பெருமை தங்கிய வட மதுரையில்
kavalam maal yaanai kontra,கவளம் மால் யானை கொன்ற - கவளங் கொண்டிருப்பதும் பெருத்ததுமான (குவலயாபீடமென்னும் கம்ஸனுடைய) யானையைக் கொலை செய்தருளின
kannanai,கண்ணனை - ஸ்ரீ க்ருஷ்ணனாகிய
arangam maalai,அரங்கம் மாலை - கோயிலிலே (கண் வளரும்) எம்பெருமானைக் குறித்து
thulapam thondu aay,துளபம் தொண்டு ஆய - திருத் துழாய்க் கைங்கர்ய நிஷ்டரும்
thol seer,தொல் சீர் - இயற்கையான சேஷத்வத்திலே நிலை நின்றவருமான
thondaradi podi,தொண்டரடிப் பொடி - தொண்டரடிப் பொடி யாழ்வார் (அருளிச் செய்த)
sol,சொல் - திருமாலை யாகிய இத்திருமொழி
ilaiya pun kavithai elum,இளைய புன் கவிதை ஏலும் - மிகவும் குற்றங்குறைகளை யுடைய கவித்வமாயிருந்த போதிலும்
empiraagu,எம்பிராற்கு - பெரிய பெருமாளுக்கு
inidhe aarey,இனிதே ஆறே - பரம போக்யமாயிருந்தபடி யென்! என்று ஈடுபடுகிறார்.)