| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 916 | திருமாலை || (இப் பிரபந்தத்தில் எம்பெருமானுக்கு உள்ள போக்யதையை வெளி இட்டார்) 45 | வள வெழும் தவள மாட மதுரை மா நகரம் தன்னுள் கவளமால் யானை கொன்ற கண்ணனை யரங்க மாலைத் துளவத் தொண்டைய தொல் சீர்த் தொண்டர் அடிப் பொடி சொல் இளைய புன் கவிதை ஏலும் எம்பிராற்கு இனியவாறே | valam elum thavalam maadam,வளம் எழும் தவளம் மாடம் - அழகு விஞ்சியிருப்பதும் வெண்ணிறமுடையதுமான மாடங்களை யுடைய ma madhurai nagaram thannul,மா மதுரை நகரம் தன்னுள் - பெருமை தங்கிய வட மதுரையில் kavalam maal yaanai kontra,கவளம் மால் யானை கொன்ற - கவளங் கொண்டிருப்பதும் பெருத்ததுமான (குவலயாபீடமென்னும் கம்ஸனுடைய) யானையைக் கொலை செய்தருளின kannanai,கண்ணனை - ஸ்ரீ க்ருஷ்ணனாகிய arangam maalai,அரங்கம் மாலை - கோயிலிலே (கண் வளரும்) எம்பெருமானைக் குறித்து thulapam thondu aay,துளபம் தொண்டு ஆய - திருத் துழாய்க் கைங்கர்ய நிஷ்டரும் thol seer,தொல் சீர் - இயற்கையான சேஷத்வத்திலே நிலை நின்றவருமான thondaradi podi,தொண்டரடிப் பொடி - தொண்டரடிப் பொடி யாழ்வார் (அருளிச் செய்த) sol,சொல் - திருமாலை யாகிய இத்திருமொழி ilaiya pun kavithai elum,இளைய புன் கவிதை ஏலும் - மிகவும் குற்றங்குறைகளை யுடைய கவித்வமாயிருந்த போதிலும் empiraagu,எம்பிராற்கு - பெரிய பெருமாளுக்கு inidhe aarey,இனிதே ஆறே - பரம போக்யமாயிருந்தபடி யென்! என்று ஈடுபடுகிறார்.) |