திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2 · அடைவு

and/or and/or Clear

Search Results for: 917 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
917திருப்பள்ளியெழுச்சி || (ஸ்ரீ நஞ்சீயர் ) - யஸ்யாவதார ரூபாணி நமஸ்யந்தி திவௌகஸ:அபஸ்யந்த: பரம் ருபம் (எந்தப் பரம புருஷனுடைய பரவாஸூ தேவ ரூபத்தைக் காணமாட்டாமல் தேவர்கள் அவனுடைய அவதார ரூபங்களை நமஸ்கரிக்கிறார்களோ) என்கிறபடியே -ஆராத,கரான தேவ ஜாதிகள் அவஸர ப்ரதீக்ஷராய் வந்து நின்றார்கள்-திருப் பள்ளி யுணர்ந்தருள வேணும் என்கிறார். ஆதித்யனானாவன் தன் ஸ்வரூப ஸித்திக்காக விளக்காய் வந்து தோற்றினான்; அவனைக் குஸல ப்ரஸ்நம் பண்ண வேண்டாவோ? (உன் அடியானான அவனை க்ஷேமம் விசாரிக்க வேண்டாவோ?” )என்கிறார். “வெய்ய கதிரோன் விளக்காக ‘ என்றார் இறே.”நாட்டை யெல்லா மெழுப்புகிற ஆதித்யனுதித்தால் எங்கள் ஆதித்யன் உதிக்க வேண்டாவோ? (எங்களை யெழுப்பும் ராம திவாகரனாகவும், அச்யுத பாநுவாகவு மிருக்கிற தேவரீர் உதிக்க வேண்டாவோ? )பாஹ்யமான அந்தகார மிறே அவனாலே போக்கலாவது; ஆந்தரமான அந்தகாரம் போக்கும் போது தேவரீர் உணர்ந்தருள வேண்டாவோ?ஆதித்யன் உதய பர்வதத்தை வந்து அணையா நின்றன்; இருள் நீங்கா நின்றது; ஸமாராதந உ பகரணமான திருப்படித் தாமங்கள் விகஸிதமாகா நின்றன; (தேவரீரை ஆராதிப்பதற்கு உறுப் பான அழகிய மலர்கள் மலர்கின்றன)ஆராதிப்பாரெல்லாரும்-தேவரீரை ஆராதிக்கும் தேவர்கள் ஆராத்யர் தேவரீரென்று தந்தாம் பரிகரங்களோடே , -தங்கள் பரிஜனங்கள் வாஹநங்களோடே அவஸரப்ரதீக்ஷராய் வந்து நின்றார்கள். -இத்தை யெல்லா மடைய தேவரீர் திருப் பள்ளி யுணர்ந்தருளி விஸேஷ கடாக்ஷம் பண்ணி யருள வேணுமென்கிறார் 1
கதிரவன் குண திசை சிகரம் வந்து அணைந்தான் கன இருள் அகன்றது காலை அம் பொழுதாய் மது விரிந்து ஒழுகின மா மலர் எல்லாம் வானவர் அரசர்கள் வந்து வந்து ஈண்டி எதிர் திசை நிறைந்தனர் இவரோடும் புகுந்த இரும் களிற்று ஈட்டமும் பிடியோடு முரசும் அதிர்தலில் அலை கடல் போன்று உளது எங்கும் அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே
பதவுரை Show / Hide
அரங்கத்து அம்மா, arangathu amma - திருவரங்கத்தில் பள்ளி கொண்டருளும் ஸ்வாமியே!
கதிரவன், Kathiravan - ஸூர்யனானவன்
குண திசை, Guna Thisai - கிழக்குத் திக்கிலே
சிகரம், Sikaram - (உதய கிரியின்) கொடு முடியிலே
வந்து அணைந்தான், Vandhu Andhaan - வந்து கூடினான்
கன இருள், Kana Irul - (இரவில்) அடர்ந்திருந்த இருளானது
அகன்றது, Agandrathu - நீங்கி யொழிந்தது
அம், Am - அழகிய
காலைப் பொழுது ஆய், Kaalaip Pozhudhu Aay - காலைப் பொழுது வர
மா மலர் எல்லாம், Maa Malar Ellaam - சிறந்து புஷ்பங்களெல்லாம்
விரிந்து, Virindhu - விகாஸமடைய
மது ஒழுகின, Madhu Ozhugina - தேன் வெள்ளமிடா நின்றன
வானவர், Vaanavar - தேவர்களும்
அரசர்கள், Arasarkal - ராஜாக்களும்
வந்து வந்து, Vandhu Vandhu - ஒருவர்க் கொருவர் முற்கோலி வந்து
ஈண்டி, Eenti - திரண்டு
எதிர் திசை, Edhir Thisai - திருக் கண்ணோக்கான தெற்குத் திக்கிலே
நிறைந்தனர், Niraindhanar - நிறைந்து நின்றார்கள்
இவரொடும் புகுந்த, Ivarodum Pugundhu - இவர்களோடு கூடவந்த (இவர்களது வாஹநமாகிய)
இரு களிறு ஈட்டமும், Iru Kaliru Ettamum - பெரிய ஆண் யானைத் திரள்களும்
பிடியொடு, Pidiyodu - பெண் யானைத் திரள்களும்
முரசும், Murasum - பேரி வாத்யங்களும்
அதிர்தலில், Adirthalil - சப்திக்கும் போது
எங்கும், Engum - எத் திசையும்
அலை, Alai - அலை யெறியா நின்ற
கடல் போன்று உளது, Kadal Pondru Ulathu - ஸமுத்ர கோஷத்தை ஒத்திருந்தது
பள்ளி எழுந்தருளாய், Palli Elundharulaaye - (ஆதலால்) திருப் பள்ளியை விட்டு எழுந்திருக்க வேணும்