திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2 · அடைவு

and/or and/or Clear

Search Results for: 920 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
920திருப்பள்ளியெழுச்சி || (ஸ்ரீ நஞ்சீயர் ) - சக்ரவர்த்தித் திருமகனா யவதரித் தருளி விரோதி, நிரஸந பூர்வகமாக ஆஸ்ரித ஸம் ரக்ஷணம் பண்ணி யருளினால் போலே த்வத் அநுபவ விரோதியைப் போக்கி அநுபவி(ப்பி?)க்கத் திருப்பள்ளி யுணர்ந்தருள வேணுமென்கிறார். 4
மேட்டு இள மேதிகள் தளை விடும் ஆயர்கள் வேயம் குழல் ஓசையும் விடை மணி குரலும் ஈட்டிய இசை திசை பரந்தன வயலுள் இரிந்தன சுரும்பினம் இலங்கையர் குலத்தை வாட்டிய வரி சிலை வானவர் ஏறே மாமுனி வேள்வியை காத்து அவபிரதம் ஆட்டிய அடு திறல் அயோத்தி எம் அரசே! அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே
பதவுரை Show / Hide
மேடு இன மேதிகள், medu ina medhigal - உயர்த்தியும் இளமையும் தங்கிய எருமைகளை
தளை விடும், thalai vidum - (மேய்கைக்குக்) கட்டவிழ்த்து விடுகிற
ஆயர்கள், aayargal - இடையர் (ஊதுகிற)
வேய்ங்குழல் ஒசையும், veyngkuzhal osaiyum - புல்லாங்குழலின் நாதமும்
விடை, vidai - எருதுகளின் (கழுத்திற் கட்டியுள்ள)
மணி, mani - மணிகளினுடைய
குரலும், kuralum - ஓசையும் (ஆகிய)
ஈட்டிய, eettiya - இவ் விரண்டும் கூடின த்வநியானது
திசை பரந்தன, thisai paranthana - திக்குக்களெங்கும் பரவி விட்டது;
வயலுள், vayalul - கழனிகளிலுள்ள
சுரும்பு இனம், surumbu inam - வண்டுகளின் திரள்
இரிந்தன, irindhana - ஆரவாரித்துக் கொண்டு கிளம்பின;
இலங்கையர் குலத்தை, ilangaiyar kulathai - ராக்ஷஸ வர்க்கத்தை
வாட்டிய, vaattiya - உருவழித்த
வரி இலை, vari ilai - அழகிய சார்ங்கத்தை யுடைய
வானவர் ஏறெ, vaanavar aere - தேவாதி தேவனே!
மா முனி, maa muni - விச்வாமித்ர மஹர்ஷியினுடைய
வேள்வியை, velviyai - யாகத்தை
காத்து, kaathu - நிறைவேற்றுவித்து
அவபிரதம் ஆட்டிய, avapradham aattiya - அவப்ருத ஸ்நாநம் செய்வித்தருளின
அடு திறள், adu thirul - (விரோதிகளை) ஒழிக்க வல்ல மிடுக்கை யுடையனாய்
அயோத்தி எம் அரசே, ayodhi em arase - அயோத்தியா புரியை ஆளுகையாலே எங்களுக்கு ஸ்வாமி யானவனே!
அரங்கத்தம்மா, arangathamma - திருவரங்கத்தில் பள்ளி கொண்டருளும் ஸ்வாமியே!
பள்ளி எழுந்தருளாய், palli ezhundharulai - திருப் பள்ளியை விட்டு எழுந்திருக்க வேணும்