| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 921 | திருப்பள்ளியெழுச்சி || 5 | புலம்பின புட்களும் பூம் பொழில்களின் வாய் போயிற்று கங்குல் புகுந்தது புலரி கலந்தது குண திசை கனை கடல் அரவம் களி வண்டு மிழற்றிய கலம்பகம் புனைந்த அலம் கலம் தொடையல் கொண்டு அடி இணை பணிவான் அமரர்கள் புகுந்தார் ஆதலால் அம்மா இலங்கையர் கோன் வழிபாடு செய் கோயில் எம்பெருமான்! பள்ளி எழுந்து அருளாயே | பூ, poo - பூத்திரா நின்றுள்ள பொழில்களின் வாய், pozhilkalin vaai - சோலைகளிலுள்ள புட்களும், pudkalum - பறவைகளும் புலம்பின, pulambina - (உணர்ந்து) ஆரவாரஞ் செய்யா நின்றன; போயிற்று, poiyitru - கழிந்தது; புலரி, pulari - ப்ராத: காலமானது புகுந்தது, pugundhadhu - வந்தது; குண திசை, guna thisai - கீழ்த் திசையிலே கனை, kanai - கோஷஞ்செய்கிற கடல், kadal - கடலினுடைய அரவம், aravam - ஒசையானது கலந்தது, kalanthadhu - வியாபித்தது; களி, kali - தேனைப் பருகிப் களிக்கின்ற வண்டு, vandu - வண்டுகளானவை மிழற்றிய, mizhatrrya - சப்தியா நிற்கிற கலம்பகன் புனைந்த, kalambakan punaindha - பல வகைப் பூக்களாலே தொடுக்கப் பட்ட அம், am - அழகிய அலங்கல் தொடையல் கொண்டு, alankal todaiyal kondu - அலங்கல் மாலைகளை ஏந்திக் கொண்டு அமரர்கள், amarargal - தேவர்கள் அடி இணை பணிவான், adi inai panivaan - தேவரீருடைய திருவடி யிணைகளில் பணி மாறுகைக்காக புகுந்தனர், pugundhanar - வந்து நின்றனர்; ஆதலில், aadhalil - ஆகையாலே அம்மா, amma - ஸர்வ ஸ்வாமிந்! இலங்கையர் கோன் வழிபாடு செய் கோயில், ilangaiyar kon vazhipadu sei koyil - லங்கேச்வரனான விபீஷணாழ்வான் தாஸ வ்ருத்தி பண்ணப் பெற்ற கோயிலிலே எம்பெருமான்!, emperumaan - அஸ்மத் ஸ்வாமியே! பள்ளி எழுந்தருளாயே, palli ezhuntharulaye - திருப் பள்ளியை விட்டு எழுந்திருக்க வேணும் |