Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 925 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
925திருப்பள்ளியெழுச்சி || 9
ஏதமில் தண்ணுமை எக்கமத்தளி
யாழ் குழல் முழவமோடு இசை திசை கெழுமி
கீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்கள்
கந்தருவர் அவர் கங்குலுகள் எல்லாம்
மாதவர் வானவர் சாரணர் இயக்கர்
சித்தரும் மயங்கினர் திருவடி தொழுவான்
ஆதலில் அவர்க்கு நாள் ஓலக்கம் அருள
அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே
ஏதம் இல், yedham il - குற்றமற்ற
தண்ணுமை, thannumai - சிறுபறையும்
எக்கம், ekkam - ஒற்றைத் தந்தியை யுடைய வாத்யமும்
மத்தளி, maththali - மத்தளமும்
யாழ், yaal - வீணையும்
குழல், kulal - புல்லாங்குழல்களுமாய்
திசை, thisai - திக்குக்களெங்கும்
முழவமோடு, muzhavamodu - இவற்றின் முழக்கத்தோடு
இசை கெழுமி கீதங்கள் பாடினர், isai kelumi keethangal paadinarr - இசை மாட்டியப் பாட்டு பாடக் கடவரான
கின்னரர், kinnarar - கின்னார்களும்
கருடர், karudar - கருடர்களும்
கெந்தருவரும், kendharuvarum - கந்தர்வர்களும்
இவர், ivar - இதோ மற்றுள்ளவர்களும்
மா தவர், maa thavar - மஹர்ஷிகளும்
வானவர், vaanavar - தேவர்களும்
சாரணர், saaranar - சாரணர்களும்
இயக்கர், iyakkar - யக்ஷர்களும்
சித்தரும், sidharum - ஸித்தர்களும்
திருவடி தொழுவான், thiruvadi thozhuvan - (தேவரீடைய) திருவடிகளில் வணங்குகைக்காக
கங்குலும் எல்லாம், kangulum ellaam - இரவெல்லாம்
மயங்கினர், mayanginar - (நெருக்கத்தில் வருந்தி) மோஹமுற்றனர்;
ஆதலில், aadhali - ஆகையாலே
அவர்க்கு, avarkku - அவர்களுக்கு
நாள் ஒலக்கம் அருள, naal olakam arul - பகலோலக்க மருளுகைக்காக
அரங்கத்தம்மா, arangathamama - திருவரங்கத்தில் பள்ளி கொண்டருளும் ஸ்வாமியே!
பள்ளியெழுந்தருளாய், palliyezhundharulaay - திருப் பள்ளியை விட்டு எழுந்திருக்க வேணும்