| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 937 | கண்ணிநுண்சிறுத்தாம்பு || 1 | கண்ணி நுண்சிறுத் தாம்பினால் கட்டுண்ணப் பண்ணி யபெரு மாயன்என் னப்பனில் நண்ணித் தென்குரு கூர்நம்பி யென்றக்கால் அண்ணிக் கும்அமு தூறுமென் நாவுக்கே. | கண்ணி, Kanni - (உடம்பிலே உறுத்தும்படி பல) முடிகளையுடைத்தாய் நுண், Nun - (உடம்பிலே அழுந்தும்படி நுட்பமாய் சிறு, Siru - (நீளம்போராதபடி) சிறியதாயிருக்கிற தாம்பினால், Thaambinaal - கயிற்றினால் கட்டுண்ண பண்ணிய, Kattunna Panniya - யசோதைப்பிராட்டி தன்னைக்கட்டும்படி பண்ணுவித்துக்கொண்ட பெருமாயன், Perumayan - விசேஷ ஆச்சரிய சக்தியையுடையனாய் என் அப்பனில், En Appanil - எனக்கு ஸ்வாமியான ஸர்வேச்வரனைவிட்டு நண்ணி, Nanni - (ஆழ்வாரைக்) கிட்டி ஆச்ரயித்து தென் குருகூர் நம்பி என்றக்கால், Then Kurugoor Nambi Endrakkal - தெற்குத் திசையிலுள்ள (ஆழ்வார் திருநகரியென்னும்) குருகூர்க்கு நிர்வாஹகாரன ஆழ்வார் என்று (அவரது திரு நாமத்தைச்) சொன்னால் அண்ணிக்கும், Annikkum - பரமபோக்யமாயிருக்கும் இனிதாயிருக்கும் என் நாவுக்கே, En Naavukke - என் ஒருவனுடைய நாவுக்கே அமுது ஊறும், Amudhu Oorum - அம்ருதம் ஊறா நிற்கும் |