திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2 · அடைவு

and/or and/or Clear

Search Results for: 939 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
939கண்ணிநுண்சிறுத்தாம்பு || ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை அருளிய அவதாரிகை — தேவு மற்று அறியேன் -என்று -புருஷார்தங்களோடே கூட பகவத் விஷயத்தையும் காற் கடைக் கொள்ளக் கடவீரோ -என்ன – எனக்கு அபுருஷார்த்தம் என்னும் அளவாயிற்று காற் கடைக் கொண்டது – ஆழ்வார் உகந்த விஷயம் -என்னும் இவ்வழியாலே -தேவு மற்று அறியிலும் அறிவன் என்கிறார் – 3
திரிதந்தாகிலும் தேவபிரானுடைக் கரியகோலத் திருவுருக்காண்பன்நான் பெரிய வண் குருகூர்நகர் நம்பிக்கா ஹரியனாபடியேன்பெற்ற நன்மையே
பதவுரை Show / Hide
திரிதந்தாகிலும், Thiridhandaagilum - (ஆழ்வாரை விட்டு) மீண்டாகிலும்
தேவபிரானுடை, Devapiraanudaiya - நித்ய ஸூரிகளுக்குத் தலைவனான எம்பெருமானுடைய
கரிய, Kariya - (நீலமேகம்போற்) கறுத்ததாய்
கோலம், Kolam - அழகியதான
திருவுரு, Thiruvuru - பிராட்டியோடு கூடிய திவ்ய ரூபத்தை
நான் காண்பன், Naan Kaanpan - நான் ஸேவிப்பேன்
பெரியவண் குருகூர்நகர் நம்பிக்கு, Periyavan Kurugoor Naga Nambikku - பெருமையும் ஒளதார்யமுமுடைய ஆழ்வார்க்கு
உரிய ஆள் ஆய், Uriya Aal Aay - அந்ந்யார்ஹ சேஷ பூதனாயிருந்து வைத்து
அடியேன் பெற்ற நன்மை, Adiyen Petra Nanmai - அடியேன் பெற்றபேறு இது காணீர்