திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2 · அடைவு

and/or and/or Clear

Search Results for: 941 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
941கண்ணிநுண்சிறுத்தாம்பு || ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை அருளிய அவதாரிகை — உம்மை புன்மையாகவும் உமக்கு ஆழ்வார் சர்வ பிரகாரத்தாலும் உபகாரகர் ஆகவும் சொன்னீர் உம்முடைய புன்மையையும் – உமக்கு ஆழ்வார் உபகரித்த நன்மையையும் சொல்லிக் காணீர் –என்ன சொல்லுகிறார் 5
நம்பினேன் பிறர் நன் பொருள் தன்னையும் நம்பினேன் மடவாரையும் முன்னெல்லாம் செம் பொன் மாடத் திருக் குருகூர் நம்பிக் கன்பனாய் அடி யேன் சதிர்த் தேனின்றே
பதவுரை Show / Hide
அடியேன், Adiyen - (இன்று அடியேன் என்று சொல்லும்படி திருந்தின) நான்
முன் எலாம், Mun Elaam - (ஆழ்வாருடைய விஷயீகாரம் பெறுவதற்கு) முன்பெல்லாம்
பிறர், Pirar - அயலாருடைய
நல் பொருள் தன்னையும், Nal Porul Thannaiyum - நல்ல பொருள்களை
நம்பினேன், Nambinen - ஆசைப் பட்டுக் கிடந்தேன்
மடவாரையும், Madavaaraiyum - பிறருடைய ஸ்த்ரீகளையும்
நம்பினேன், Nambinen - விரும்பிப் போந்தேன்
இன்று, Indru - இப்போதோ வென்றால்
செம் பொன் மாடம், Sem Pon Maadam - செவ்விய பொன்னாற் சமைந்த மாடங்களை யுடைய
திரு குருகூர் நம்பிக்கு, Thiru Kurugoor Nambikku - திருநகரிக்குத் தலைவரான ஆழ்வார்க்கு
அன்பன் ஆய், Anban Aay - பக்தனாகப் பெற்று
சதிர்த்தேன், Sathirthen - சதிரையுடையேனானேன் (சமத்தனாய் விட்டேன்)