| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 941 | கண்ணிநுண்சிறுத்தாம்பு || 5 | நம்பினேன் பிறர் நன் பொருள் தன்னையும் நம்பினேன் மடவாரையும் முன்னெல்லாம் செம் பொன் மாடத் திருக் குருகூர் நம்பிக் கன்பனாய் அடி யேன் சதிர்த் தேனின்றே | அடியேன், Adiyen - (இன்று அடியேன் என்று சொல்லும்படி திருந்தின) நான் முன் எலாம், Mun Elaam - (ஆழ்வாருடைய விஷயீகாரம் பெறுவதற்கு) முன்பெல்லாம் பிறர், Pirar - அயலாருடைய நல் பொருள் தன்னையும், Nal Porul Thannaiyum - நல்ல பொருள்களை நம்பினேன், Nambinen - ஆசைப் பட்டுக் கிடந்தேன் மடவாரையும், Madavaaraiyum - பிறருடைய ஸ்த்ரீகளையும் நம்பினேன், Nambinen - விரும்பிப் போந்தேன் இன்று, Indru - இப்போதோ வென்றால் செம் பொன் மாடம், Sem Pon Maadam - செவ்விய பொன்னாற் சமைந்த மாடங்களை யுடைய திரு குருகூர் நம்பிக்கு, Thiru Kurugoor Nambikku - திருநகரிக்குத் தலைவரான ஆழ்வார்க்கு அன்பன் ஆய், Anban Aay - பக்தனாகப் பெற்று சதிர்த்தேன், Sathirthen - சதிரையுடையேனானேன் (சமத்தனாய் விட்டேன்) |