திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2 · அடைவு

and/or and/or Clear

Search Results for: 942 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
942கண்ணிநுண்சிறுத்தாம்பு || ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை அருளிய அவதாரிகை — ஆழ்வார் இப்போது இங்கே விஷயீ கரித்தாலும் -நீர் தாம் அநாதி காலம் வாசனை பண்ணிப் போந்த-விஷயம் ஆகையாலே மறுவல் இடிலோ -என்ன – அங்கன் மறுவல் இடும்படியாயோ ஆழ்வார் பிரசாதம் என் பக்கல் இருப்பது -என்கிறார். 6
இன்று தொட்டு மெழுமையு மெம்பிரான் நின்று தன் புகழேத்த வருளினான் குன்ற மாடத் திருக் குருகூர்நம்பி என்றுமென்னை யிகழ்விலன் காண்மினே
பதவுரை Show / Hide
இன்று தொட்டும், Indru Thottum - இன்று முதலாக
எழுமையும், Ezhumaiyum - மேலுள்ள காலமெல்லாம்
நின்று, Nindru - (நான்) அத்யவஸாயம் நிலைக்கப் பெற்று
தன் புகழ், Than Pugazh - தம்முடைய (ஆழ்வாருடைய) திருப்புகழ்களை
ஏத்த, Eetha - துதிக்கும்படி
எம் பிரான் அருளினான், Em Piraan Arulinan - எம் ஸ்வாமியான ஆழ்வார் க்ருபை பண்ணினார்
குன்றம் மாடம், Kunram Maadam - மலை போன்ற மாடங்களையுடைய
திருகுருகூர் நம்பி, Thiru Kurugoor Nambi - திருநகரிக்குத் தலைவரான அவ்வாழ்வார்
என்றும், Endrum - (இனி) எக்காலத்திலும்
என்னை, Ennai - என் விஷயத்தில்
இகழ்வு இவன், Igazhvu Ivan - அநாதரமுடையவராகஇருக்க மாட்டார்
காண்மின், Kaanmin - (இதனை அநுபவத்தில்) கண்டு கொள்ளுங்கள்