திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2 · அடைவு
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 943 | கண்ணிநுண்சிறுத்தாம்பு || ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை அருளிய அவதாரிகை — ஆழ்வார் தம் பக்கலில் பண்ணின நிர்ஹேதுக விஷயீ காரத்தை கண்டு – இவ் விஷயீ காரத்துக்கு யோக்யதை உண்டாய் இருக்க நாட்டார் இழக்கைக்கு அடி என் – என்று அனுசந்தித்து – இவருடைய பெருமையை அறியாமையாலே இருக்கிறார்கள் -என்று எல்லாரும் அறியும்படி சொல்லக் -கடவேன் என்கிறார் . 7 | கண்டு கொண்டென்னைக் காரிமாறப்பிரான்
பண்டை வல்வினை பாற்றி யருளினான்
எண்டிசையு மறிய வியம்புகேன்
ஒண்டமிழ்ச் சடகோப னருளையே | பதவுரை Show / Hideபிரான், Piraan - பரமோபகாரகராய் காரி மாறன், Kaari Maaran - பொற் காரியார் திருக்குமாரரான நம்மாழ்வார் என்னை, Ennai - (தமது பெருமை அறியாத) என்னை கண்டு, Kandu - கடாக்ஷத்து கொண்டு, Kondu - கைக்கொண்டு பண்டைவல்வினை, Pandai Valvinai - அநாதியாய்ப் பிரபலமாயிருந்த பாபங்களை பாற்றி அருளினான், Paatri Arulinan - அழிந்து போம்படி போக்கடித் தருளினார் (ஆதலால்) ஒண் தமிழ் சடகோபன் அருளையே, (Aadhalal) On Thamizh Sadagopan Arulaiye - அழகிய தமிழ்க் கவிகளுக்கு இருப்பிடமான அவ்வாழ்வாருடைய அருளையே எண் திசையும், En Thisaiyum - எட்டுத்திக்கிலுள்ளவர்களும் அறிய, Ariya - அறியும்படி இயம்புகேன், Iyampuken - சொல்லக்கடவேன் |