| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 943 | கண்ணிநுண்சிறுத்தாம்பு || 7 | கண்டு கொண்டென்னைக் காரிமாறப்பிரான் பண்டை வல்வினை பாற்றி யருளினான் எண்டிசையு மறிய வியம்புகேன் ஒண்டமிழ்ச் சடகோப னருளையே | பிரான், Piraan - பரமோபகாரகராய் காரி மாறன், Kaari Maaran - பொற் காரியார் திருக்குமாரரான நம்மாழ்வார் என்னை, Ennai - (தமது பெருமை அறியாத) என்னை கண்டு, Kandu - கடாக்ஷத்து கொண்டு, Kondu - கைக்கொண்டு பண்டைவல்வினை, Pandai Valvinai - அநாதியாய்ப் பிரபலமாயிருந்த பாபங்களை பாற்றி அருளினான், Paatri Arulinan - அழிந்து போம்படி போக்கடித் தருளினார் (ஆதலால்) ஒண் தமிழ் சடகோபன் அருளையே, (Aadhalal) On Thamizh Sadagopan Arulaiye - அழகிய தமிழ்க் கவிகளுக்கு இருப்பிடமான அவ்வாழ்வாருடைய அருளையே எண் திசையும், En Thisaiyum - எட்டுத்திக்கிலுள்ளவர்களும் அறிய, Ariya - அறியும்படி இயம்புகேன், Iyampuken - சொல்லக்கடவேன் |