Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 945 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
945கண்ணிநுண்சிறுத்தாம்பு || 9
மிக்கவேதியர் வேதத்தினுட் பொருள்
நிற்கப் பாடியென் நெஞ்சுள் நிறுத்தினான்
தக்கசீர்ச் சடகோபனென்னம்பிக்காள்
புக்க காதலடிமைப் பயனன்றே
மிக்க வேதியர் வேதத்தின், Mikka Vethiyar Vethathin - சிறந்த வைதிகர்களால் ஓதப்படுகின்ற வேதத்தினுடைய
உள் பொருள், Ul Porul - உள்ளுரை பொருளானது
நிற்க, Nirka - நிலை நிற்கும்படி
பாடி, Paadi - திருவாய்மொழியைப் பாடி
என் நெஞ்சுள், En Nenjul - என்னுடைய ஹ்ருதயத்திலே
நிறுத்தினான், Niruthinaan - (அந்த வேதார்த்தங்களை அல்லது திருவாய்மொழியை) ஸ்ப்ரதிஷ்டிதமாக்கி யருளினார் ( ஆழ்வார்)
தக்க சீர், Dakka Seer - தகுதியான குணங்களையுடையராய்
சடகோபன், Sadagopan - சடகோபனென்ற திருநாமத்தை யுடையரான
என் நம்பிக்கு, En Nambikku - (அந்த) ஆழ்வார் விவயத்திலே
ஆள் புக்க, Aal Pukka - அடிமை செய்வதற்கு உறுப்பான
காதல், Kaadhal - ஆசையானது
அன்றே, Andrae - அந்த க்ஷணத்திலேயே
அடிமைப் பயன், Adimai Payan - (ஆழ்வார் திருவடிகளில்) கைங்கரியம் செய்வதையே பயனாகவுடைத்தாய்த்து