| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 945 | கண்ணிநுண்சிறுத்தாம்பு || 9 | மிக்கவேதியர் வேதத்தினுட் பொருள் நிற்கப் பாடியென் நெஞ்சுள் நிறுத்தினான் தக்கசீர்ச் சடகோபனென்னம்பிக்காள் புக்க காதலடிமைப் பயனன்றே | மிக்க வேதியர் வேதத்தின், Mikka Vethiyar Vethathin - சிறந்த வைதிகர்களால் ஓதப்படுகின்ற வேதத்தினுடைய உள் பொருள், Ul Porul - உள்ளுரை பொருளானது நிற்க, Nirka - நிலை நிற்கும்படி பாடி, Paadi - திருவாய்மொழியைப் பாடி என் நெஞ்சுள், En Nenjul - என்னுடைய ஹ்ருதயத்திலே நிறுத்தினான், Niruthinaan - (அந்த வேதார்த்தங்களை அல்லது திருவாய்மொழியை) ஸ்ப்ரதிஷ்டிதமாக்கி யருளினார் ( ஆழ்வார்) தக்க சீர், Dakka Seer - தகுதியான குணங்களையுடையராய் சடகோபன், Sadagopan - சடகோபனென்ற திருநாமத்தை யுடையரான என் நம்பிக்கு, En Nambikku - (அந்த) ஆழ்வார் விவயத்திலே ஆள் புக்க, Aal Pukka - அடிமை செய்வதற்கு உறுப்பான காதல், Kaadhal - ஆசையானது அன்றே, Andrae - அந்த க்ஷணத்திலேயே அடிமைப் பயன், Adimai Payan - (ஆழ்வார் திருவடிகளில்) கைங்கரியம் செய்வதையே பயனாகவுடைத்தாய்த்து |