| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 946 | கண்ணிநுண்சிறுத்தாம்பு || 10 | பயனன்றாகிலும் பாங்கலராகிலும் செயல்நன்றாகத் திருத்திப் பணி கொள்வான் குயில் நின்றார் பொழில்சூழ் குருகூர்நம்பி முயல்கின்றேனுன்றன் மொய்கழற்கன்பையே | பயன் அன்று ஆகிலும், Payan Andru Agilum - (பிறர் திருந்துவதால்) தமக்கொரு பயனில்லாமற் போனாலும் பாங்கு அலர் ஆகிலும், Paangu Alar Agilum - (அவர்கள் திருந்துகைக்குப்) பாங்காக அமையாமற் போனாலும் செயல், Seyal - தமது அநுஷ்டாகத்தாலே நன்றாக திருத்தி, Nandraaga Thiruthi - நன்றாக சிக்ஷித்து பணி கொள்வான், Pani Kolvaaan - (அவர்களை) ஆட்கொள்வதற்காக குயில் நின்று ஆல் பொழில் சூழ் குருகூர் - குயில்களானவை நின்று ஆரவாரஞ் செய்யப் பெற்ற சோலைகளாலே சூழப்பட்ட திருநகரியிலே (எழுந்தருளியிருக்கிற) நம்பி!, Nambi! - ஆழ்வாரே! உன் தன், Un Than - தேவரீருடைய மொய் கழற்கு, Moi Kazharkku - சிறந்த திருவடிகளில் அன்பையே, Anbaiye - அன்பு உண்டாவதைக் குறித்தே முயல்கின்றேன், Muyalkindren - முயற்சி செய்கின்றேன் |