| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 947 | கண்ணிநுண்சிறுத்தாம்பு || 11 | அன்பன் தன்னை யடைந்தவர் கட்கெல்லாம் அன்பன் தென்குரு கூர்நகர் நம்பிக்கு அன்பனாய் மதுரகவி சொன்னசொல் நம்புவார்ப்பதி வைகுந்தம் காண்மினே | அன்பன் தன்னை, Anban Thannai - ஆச்ரித பக்ஷபாதியான எம்பெருமானை அடைந்தவர்கட்கு எல்லாம், Adainthavarkatku Ellam - ஆச்ரயித்தவர்களான ஸகல பாகவதர் பக்கலிலும் அன்பன், Anban - பக்தியை யுடையரான தென் குருகூர் நகர் நம்பிக்கு, Then Kurugoor Nagar Nambikku - நம்மாழ்வர் விஷயத்திலே அன்பன் ஆய், Anban Ai - பக்தனாயிருந்து கொண்டு மதுரகவி சொன்ன சொல், Madhurakavi Sonna Sol - மதுரகவி அருளிச் செய்த இத் திவ்வியப் பிரபந்தத்தை நம்புவார், Nambuvaar - (தங்களுக்குத் தஞ்சமாகக்) விச்வஸித் திருப்பவர்களுக்கு பதி, Pathi - வாஸஸ்தாநமாவது வைகுந்தம் காண்மின், Vaikundam Kaanmin - பரம பதமாம் |