| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 949 | பெரிய திருமொழி || (1-1-வாடினேன்வாடி) (இப்பாட்டிலும் முன்னடிகளால் பூர்வாவஸ்தையில் அநுதாபத்தையும், பின்னடிகளால் உத்தராவஸ்தையில் ஆநந்தத்தையும் பேசுகிறார்) 2 | ஆவியே அமுதே என நினைந்து உருகி அவரவர் பணை முலை துணையா பாவியேன் உணராது எத்தனை பகலும் பழுது போய் ஒழிந்தன நாள்கள் தூவிசேர் அன்னம் துணையோடும் புணரும் சூழ் புனல் குடந்தையே தொழுது என் நாவினால் உய்ய நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம் –1-1-2 | ஆவியே என, Aaviye ena - ‘எனக்கு உயிர் போன்றவளே!‘ என்றும் அமுதே என, Amudhe ena - ‘எனக்கு அம்ருதம் போல் இனியவளே!’ என்றும் (இப்படிப் பலவாறாகச் சொல்லி வாய் பிதற்றிக்கொண்டு) நினைந்து உருகி, Ninaindhu urughi - சிற்றின்பங்களை நினைத்து நினைத்து மனமுருகி அவர் அவர், Avar avar - பலபல பெண்டுகளுடைய பணைமுலை, Panaimulai - பருத்த முலைகளையே துணை ஆ, Thunai aa - ரக்ஷகமாகக்கொண்டு பாவியேன், Paaviyen - பாபியான நான் உணராது, Unaraadhu - ஸ்வரூபஜ்ஞானம் பெறாததன் பயனாக எத்தனை பகலும் பழுது போய் ஒழிந்தன, Eththanai pagalum pazhuthu poy olindhena - ஐயோ! எத்தனை காலம் வீணாகக் கழிந்தன; எத்தனை நாட்கள் பழுது போய் ஒழிந்தன, Eththanai naatkal pazhuthu poy olindhena - அந்தோ எத்தனை நாள்கள் பாழாய்க் கழிந்தன! (காலமெல்லாம் பாழாகப் போயிற்றே!) தூவிசேர் அன்னம், Thoovisaar annam - இறகுகளையுடைய அன்னப்பறவைகள் துணையொடும் புணரும், Thunaiyodum punarum - பேடையோடு புணருமிடமாய் புனல் சூழ், Punal soozh - நீர்நிலங்கள் சூழ்ந்ததான குடந்தையே, Kudandhaye - திருக்குடந்தையையே தொழுது, Thozhudhu - ஸேவித்து உய்ய, Uyya - உஜ்ஜீவிக்கும்படியாக நாராயணா என்னும் நாமம் என்நாவினால் நான் கண்டு கொண்டேன், Narayana enum naamam ennavinal naan kandu konden - திருவஷ்டாக்ஷர மஹா மந்த்ரத்தை எனது நாவிலே உரைத்துக் கொள்ளப் பெற்றேன் |