| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 95 | பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-ஏழாம் திருமொழி - தொடர்சங்கிலிகை) (தளர் நடை நடத்தல், தளர் நடைப் பருவம்) 10 | திரைநீர்ச் சந்திர மண்டலம் போல் செங்கண்மால் கேசவன் தன் திருநீர் முகத்துத் துலங்கு சுட்டி திகழ்ந்தெங்கும் புடை பெயர பெருநீர்த் திரை யெழு கங்கை யிலும் பெரியதோர் தீர்த்த பலம் தருநீர் சிறுச் சண்ணம் துள்ளம் சோரத் தளர்நடை நடவானோ–1-7-10 | செம் கண் மால்,Sem kan mal - சிவந்த கண்களையும் கரு நிறத்தையுமுடைய கேசவன்,Kesavan - கேசவனென்னுந் திருநாமமுடைய இவன், திரை நீர்,Thirai neer - அலைகின்ற நீரையுடைய ஸமுத்திரத்தின் நடுவில் சந்திரன் மண்டலம் போல்,Chandiran mandalam pol - (அசைந்து தோன்றுகிற) ப்ரதிபிம்ப சந்த்ர மண்டலத்தைப் போல தன்,Than - தன்னுடைய திரு நீர்,Thiru neer - அழகிய ஒளியை யுடைய முகத்து,Mugathu - திருமுகத்திலே துலங்கு,Thulangu - விளங்குகின்ற சுட்டி,Sutti - சுட்டியானது எங்கும்,Engum - எல்லா விடத்திலும் திழ்ந்து,Thizhnthu - ப்ரகாசித்துக் கொண்டு புடை பெயர்,Pudai peyar - இடமாகவும் வலமாகவும் அசையவும் பெரு நீர்,Peru neer - சிறந்த தீர்த்தமாகிய திரை எழு கங்கையிலும்,Thirai ezhu gangaiyilum - அலை யெறிகிற கங்கையிற் காட்டிலும் பெரியது,Periyathu - அதிகமான ஓர்,Or - ஒப்பற்ற தீர்த்த பலம்,Theertha balam - தீர்த்த பலத்தை தரும்,Tharum - கொடுக்கின்ற நீர்,Neer - ஜலத்தை உடைத்தான சிறு சண்ணம்,Siru sannam - சிறிய சண்ணமானது துள்ளம் சோர்,Thullam sor - துளி துளியாகச் சொட்டவும் தளர்நடை நடவான,Thalar nadai nadavano - இளநடையை நடக்கமாட்டானோ? (நடக்கவேணும்.) |