| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 951 | பெரிய திருமொழி || (1-1-வாடினேன்வாடி) (‘நாம் எல்லார்க்கும் கீழ்ப்படிந்திருக்க வேண்டும்’ என்று ஆசைப்பட வேண்டியது போய் எல்லாரிலும் நாம் மேற்பட்டிருக்க வேண்டும்; நாமே வெற்றி பெற்று எல்லாரும் நமக்குத் தோற்றிருக்க வேண்டும்’ என்று ஆசைப்பட்டுக் கிடந்தேன்; கையிலிருந்து ஒரு காசு நழுவிப் போனாலும் ஸர்வஸ்வமும் இழந்தாற் போல் அது தவித்துக் கிடந்தேன்; மாதர்களோடு புணர்ந்து வாழ்வதற்கு மேற்பட வாழ்ச்சியேயில்லையென்று துணிந்து கிடந்தேன் ; ஒன்றிலும் நிலைத்து நிற்கமாட்டாமல் கண்டவிடங்களிலும் சபலமாய்த் திரியும் நெஞ்சை யுடையேனான நான் என் செய்வது ! எப்படி உஜ்ஜீவிப்பது !! என்று தடுமாறிக் கிடந்தவளவிலே எம்பெருமானுடை நிர்ஹேதுகக் கிருபையாலே இன்று நன்றாக உஜ்ஜீவிக்க வழி ஏற்பட்டது என்றாராயிற்று.) 4 | வென்றியே வேண்டி வீழ் பொருட்கிரங்கி வேற்கணார் கலவியே கருதி நின்றவா நில்லா நெஞ்சினை யுடையேன் என் செய்கேன் நெடு விசும்பு அணவும் பன்றியாய் அன்று பாரகம் கீண்ட பாழியான் ஆழியான் அருளே நன்று நான் உய்ய நான் கண்டு கொண்டேன் நாராயணா வென்னும் நாமம் –1-1-4 | வென்றியே வேண்டி, Vendriye vendi - வெற்றியையே விரும்பியும் வீழ் பொருட்கு இரங்கி, Veezh porutku irangi - நச்வரமான பொருள்களைப் பற்றிக் கரைந்தும் வேல் கணார் கலவியே கருதி, Vel kanar kalaviye karudhi - வேல் போன்ற கண்களையுடைய மாதர்களின் கலவியை ஆசைப்பட்டும் (ஆக இப்படிகளாலே) நின்ற ஆ நில்லா நெஞ்சினை உடையேன், Nindra aa nilla nenjinai udaiyen - நின்றபடி நில்லாத [சஞ்சலமான] நெஞ்சை யுடையேனான நான் என் செய்கேன், En seiken - என்ன பண்ணுவேன்? அன்று, Andru - முன்னொரு காலத்து நெடு விசும்புஅணவும் பன்றி ஆய், Nedu visumbu anavum panri aay - நெடிய ஆகாசத்தை அளாவி வளர்ந்த மஹா வராஹஸ்வரூபியாய் பாரகம் கீண்ட, Paragam keenda - பூ மண்டலத்தை உத்தரித்த பாழியான், Paazhiyaan - மிடுக்கையு டையனாய் ஆழியான், Aazhiyaan - ஸ்ரீ ஸுதர்சந பாணியான ஸர்வேச்வரனுடைய அருளே, Arule - க்ருபையினாலே நான் நன்று உய்ய, Naan nanru uyya - நான் செவ்வையாக உஜ்ஜீவிக்கும்படி நாராயணா என்னும் நாமம் நான் கண்டு கொண்டேன், Narayana enum naamam naan kandu konden - நாராயணா என்னும் நாமம் நான் கண்டு கொண்டேன் |