திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 952 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
952பெரிய திருமொழி || (1-1-வாடினேன்வாடி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (உலகில் திருடப்படும் பொருளின் தாரதம்மியத்திற்கு ஏற்பவும் பொருளுடையவனது யோக்யதையின் தாரதம்மியத்திற்கு ஏற்பவும் பாபத்திலும் தாரதம்மியமுண்டு; விறகு திருடினவனுடைய பாபத்திற்காட்டில் ரத்னம் திருடினவனுடைய பாபம் பெரிது; சூத்ரனுடைய பொருளைத் திருடின பாபத்திற்காட்டில் பிராமணனுடைய பொருளைத் திருடின பாபம் பெரிது. நான் திருடின பொருளும் சிறந்தது, அப்பொருளுடையவனும் ஸர்வோத்தமன் ; சிறந்தரத்னத்தினும் மேற்பட்டதான ஆத்மவஸ்துவை அபஹரித்தேன்; அந்த வஸ்துவோ ஸர்வோத்தமனான எம்பெருமானுடையது. ஆகையாலே – ‘இதற்கு மேற்பட்ட பாபமில்லை’ என்னலாம்படியான கொடிய பாபத்திற்குக் கொள்கலமான களவைச் செய்தவனாயினேன். இப்போது நானிருக்கிறபடியைப் பாருங்கள்; ஸ்ரீமந்நாராயண நாமத்தை அநுஸந்திக்க வேணுமென்று நினைக்கும்போதே எனது ஹருதயம் நீர்ப்பண்டமாக உருகுகின்றது; அத்திருநாமத்தை வாய்விட்டுச் சொல்லத் தொடங்கினால் குரல் தழதழத்துப் போகிறது; ஆநந்தக் கண்ணீர் உடம்பெங்கும் முத்துமாலையிட்டாற்போலே பெருகுகின்றது. இப்படியாயிருந்து கொண்டு அஹோராத்ரமும் நான் நாராயண நாமந்தன்னையே கதறுபவனாயினேன் என்றாராயிற்று.) 5
கள்வனேன் ஆனேன் படிறு செய்திருப்பேன் கண்டவா திரி தந்தேனேலும் தெள்ளியேன் ஆனேன் செல் கதிக்கமைந்தேன் சிக்கெனத் திருவருள் பெற்றேன் உள்ளெலாம் உருகிக் குரல் தழுத்து ஒழிந்தேன் உடம்பெலாம் கண்ண நீர் சோர நள்ளிருளளவும் பகலும் நான் அழைப்பன் நாராயணா வென்னும் நாமம் –1-1-5
பதவுரை Show / Hide
கள்வனேன் ஆனேன், Kalvanen aanen - (கீழ்க்கழிந்த காலமெல்லாம்) ஆத்மாபஹாரக் கள்வனாகி
படிறு செய்து இருப்பேன், Padiru seydhu iruppen - பலபல தீமைகளைச் செய்பவனாகி
கண்டவா திரிதந்தேனேலும், Kandava thirithandhenelum - (இப்படி) மனம்போன படியே திரிந்துழன்றேனாயினும் (இன்று)
தெள்ளியேன் ஆனேன், Thelliyen aanen - தெளிவு பெற்றவனானேன்
திருஅருள்சிக்கன பெற்றேன், Thiru arul sikkana petren - பகவத் கிருபையைத் திண்ணிதாக லபிக்கப் பெற்றேன்
செல் கதிக்கு அமைந்தேன், Sel gathikku amaindhen - போகவேண்டிய நல்வழிக்கு ஆளானேன்
உள்எலாம் உருகி, Ul elam urugi - ஹ்ருதய மடங்கலும் நீர்ப்பண்டமாகிக்
குரல் தழுத்தொழிந்தேன், Kural thazhuthozindhen - குரல் தழுதழுக்கப்பெற்று
கண்ண நீர் உடம்பு எலாம் சோர, Kanna neer udambu elam sora - ஆநந்த பாஷ்பமானது சரீரம் நிறையப்பெருகப்பெற்று
நள் இருள் அளவும் பகல் அளவும், Nal irul alavum pagal alavum - அஹோராத்ர விபாகமின்றி ஸர்வகாலத்திலும்
நாராயணா என்னும் நாமம் நான் அழைப்பன், Narayana enum naamam naan azhaippan - நாராயணா நாமத்தைச்சொல்லி நான் கதறா நிற்பன்