Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 955 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
955பெரிய திருமொழி || (1-1-வாடினேன்வாடி) (ஓர் ஆசிரியன் திருவடிகளிலே சென்று பணிந்து குனிந்து கேட்டவனல்லேனாகையாலே ஒரு சாஸ்த்ர ஞானமும் எனக்கில்லை ; நெஞ்சை ஒரு நொடிப்பொழுதாகிலும் நல்விஷயத்திலே செலுத்தின னல்லேன் ; செவி வாய் கண் மூக்கு உடலென்னுமைம்புலன்கள் விரும்புகின்ற சப்தாதி விஷயங்களிலேயே நெஞ்சைச் செலுத்திப் போந்தவனாதலால் அறிவு கேடனாய் ஹிதசிந்தை பண்ணப்பெற்றிலேன்; எனக்கொரு நன்மை ஸம்பாதியாதவளவேயன்றி உலகத்திலுள்ள பிராணிகளையெல்லாம் ஹிம்ஸிக்கும் வழியைச் சிந்தித்தும் திரிந்தேன்; எல்லாரையும் ஹிம்ஸித்து நான் வயிறு வளர்க்கும் வழியையே நோக்கினேன். இப்படி நான் இருந்தது நேற்றுவரையில் ; இன்று இந்த நிலைமைகளெல்லாம் தவிர்ந்து நல்வீடு சேர்ந்து உஜ்ஜீவிக்க வேண்டிய வழியைச் சிந்தித்து, இக்கரையில் நின்றும் அக்கரையிலே கொண்டு தள்ள வல்லதொரு திருநாமத்தைத் துணையாகப் பற்றினேன்.) 8
கற்றிலேன் கலைகள் ஐம்புலன் கருதும் கருத்துளே திருத்தினேன் மனத்தை
பெற்றிலேன் அதனால் பேதையேன் நன்மை பெரு நிலத்தாருயிர்க்கு எல்லாம்
செற்றமே வேண்டித் திரி தருவேன் தவிர்ந்தேன் செல்கதிக்கு உய்யுமாறு எண்ணி
நல் துணையாகப் பற்றினேன் அடியேன் நாராயணா வென்னும் நாமம் –1-1-8
கலைகள், Kalaigal - சாஸ்த்ரங்களை
கற்றிலேன், Kattrilen - கற்றறிந்தவன் அல்லேன்
ஐம்புலன் கருதும் கருத்துள், Aimpulan karuthum karuthul - பஞ்சேந்திரியங்கள் விரும்புகின்ற விஷயங்களிலே
மனதைத் திருத்தினேன், Manathai thiruthinen - நெஞ்சைச் செலுத்திக் கிடந்தேன்
அதனால், Adhanaal - இப்படி இருந்ததனாலே
பேதையேன், Pethaiyen - அவிவேகியான நான்
நன்மை பெற்றிலேன், Nanmai petrilen - ஒரு நன்மையும் பெறாதவனாயினேன்
பெரு நிலத்து ஆர், Peru nilathu aar - பெரிய இப்பூமியிலேயுள்ள
உயிர்க்கு எல்லாம், Uyirku ellaam - பிராணிகளுக்கு எல்லாம்
செற்றமே வேண்டி, Settrame vendi - தீங்கு செய்வதையே புருஷார்த்தமாகக் கொண்டு
திரிதருவேன், Thiritharuven - (அதுவே போதுபோக்காகத்) திரிந்து கொண்டிருந்தேன்
தவிர்ந்தேன், Thavirnthen - (இப்படி நெடுங்காலம் கெட்டுப் போனேனாகிலும்), இன்று பகவத் கடாக்ஷத்தாலே இக்கொடுமைகளெல்லாம் தவிரப்பெற்றேன்
அடியேன், Adiyen - தாஸனாகப் பெற்ற நான்
செல்கதிக்கு உய்யும் ஆறு எண்ணி, Selkathikku uyyum aaru enni - செல்ல வேண்டிய நல்வழியை நண்ணி உஜ்ஜீவிக்கும்படியைச் சிந்தித்து
நாராயணா என்னும் நாமம், Narayana ennum namam - நாராயணா நாமத்தை
நல் துணை ஆக பற்றினேன், Nal thunai aaga patrinen - நல்ல ஸஹாயமாகக் கைக்கொண்டேன்